AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெல்லி குண்டுவெடிப்பு… புல்வாமாவுடன் தொடர்பா? பரபரப்பு தகவல்

Terror Link Suspected: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.. இந்த வெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து புல்வாமாவுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி குண்டுவெடிப்பு… புல்வாமாவுடன் தொடர்பா?  பரபரப்பு தகவல்
டெல்லி கார் குண்டு வெடிப்பு காட்சிகள்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Nov 2025 17:31 PM IST

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், டெல்லி (Delhi) செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் 17 பேர் எமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள், இது ஒரு பயங்கரவாத செயலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு தற்கொலைத் தாக்குதல் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர். அந்த கார் புல்வாமாவைச் (Pulwama) சேர்ந்த டாக்டர் உமர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று காரில் இருந்தவர் டாக்டர் உமர் என்பது முதலில் உறுதி செய்யப்பட்டது.

தொடரும் கைதுகள்

டாக்டர் உமர் புல்வாமாவைச் சேர்ந்தவர். அவர் ஸ்ரீநகரில் உள்ள எம்.டி மருத்துவக் கல்லூரியிலும், ஜி.எம்.சி அனந்த்நாக்கிலும் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தற்போது உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் அமீர் என்ற பெயரில் வாகனம் வாங்கிய டாக்டர் உமர், குண்டுவெடிப்புக்கு அதே வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : நாட்டையே உலுக்கிய டெல்லி வெடிகுண்டு விபத்து.. இதுவரை இல்லாத புதிய முறை.. காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் தகவல்..

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுகள் தொடர்கின்றன. ஜம்மு காஷ்மீரில்  இந்த வழக்கில் சந்தேகத்துக்குரிய அமீர் ரஷீத் மிர் (27), உமர் ரஷீத் மிர் (30), தாரிக் மாலிக் (44) ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் 13 சந்தேக நபர்கள் டெல்லி காவல்துறையினரின் காவலில் உள்ளனர்.

காவல்துறையினர் இரவு முதல் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். குண்டுவெடிப்பு தொடர்பான பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கார் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது. பதர்பூர் எல்லையிலிருந்து செங்கோட்டை வாகன நிறுத்துமிடம் வரை, அவுட்டர் ரிங் ரோடு முதல் காஷ்மீர் கேட், செங்கோட்டை வரை சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் 200 போலீசார் பல முக்கிய விவரங்களை சேகரித்துள்ளனர். சந்தேக நபர்களாக சுமார் 13 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

புல்வாமா தாக்குதலுடன் தொடர்பா?

ஃபரிதாபாத் மற்றும் புல்வாமா டெல்லி குண்டுவெடிப்புடன் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. டாக்டர் உமருக்கு காரை விற்ற தாரிக் புல்வாமாவில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில், ஃபரிதாபாத்தில் இரண்டு மருத்துவர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 2900 கிலோ அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிக்க : வரலாறு சொல்வதென்ன? டெல்லியை உலுக்கிய குண்டுவெடிப்புகள் இவைதான்!

டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம், டெல்லி குண்டுவெடிப்பு  தொடர்பான முதற்கட்ட விசாரணையில்.. அம்மோனியம் நைட்ரேட்டின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இரண்டிற்கும் இடையே தொடர்பு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முதற்கட்ட விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை காவல் நிலைய எஸ்ஐ வினோத் நயனின் அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்த எஸ்.ஐ. வினோத்.. வெடி சத்தம் கேட்டதும், வெளியே சென்று பார்த்தார். வாகனங்கள் தீப்பிடித்து எரிவதைக் கண்டதாக அவர் புகார் அளித்தார்.

Follow Us