டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார்.. 8 பேர் உயிரிழந்த சோகம்..
டெல்லியில் ஒரு பெரிய வெடிப்பு விபத்து பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளது. செங்கோட்டை அருகே ஒரு கார் வெடித்தது. மெட்ரோ நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து ஏற்பட்ட இந்த வெடிப்பு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர் மற்றும் ஐந்து கார்கள் முற்றிலுமாக சேதமடைந்தது.
டெல்லி, நவம்பர் 10, 2025: டெல்லியில் ஒரு பெரிய வெடிப்பு விபத்து பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளது. செங்கோட்டை அருகே ஒரு கார் வெடித்தது. மெட்ரோ நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து ஏற்பட்ட இந்த வெடிப்பு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர் மற்றும் ஐந்து கார்கள் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாலை 6.45 மணிக்கு இந்த விபத்து நடந்தது. சமீபத்திய தகவல்களின்படி, வெடிப்பு காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தடயவியல் மற்றும் சிறப்புப் பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
பயங்கரவாத சதி செயலா?
View this post on Instagram
டெல்லியின் புறநகரில் இன்று பயங்கரவாத சதித்திட்டத்தை போலீசார் முறியடித்தனர். ஏழு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில், இந்த குண்டுவெடிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்பை அடுத்து, தேசிய தலைநகர் டெல்லியில் மத்திய அரசு உயர் எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
கார் வெடித்து சிதறிய இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இடமாகும். சாந்தினி சாக் மார்க்கெட் உட்பட பல முக்கிய பகுதிகளை இணைக்கும் மையமாக இது அமைந்துள்ளது. மாலை ஆறு முப்பது மணி அளவில், அதாவது அலுவலகங்களில் இருந்து மக்கள் திரும்பும் பீக் நேரத்தில் இந்த கார் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் நேரத்தை பார்த்து இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்குப் பின்னால் பயங்கரவாத சதித்திட்டம் ஏதேனும் இருக்கக்கூடுமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
8 பேர் உயிரிழப்பு:
எட்டு பேர் உயிரிழந்த நிலையில் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: கோவா அயர்ன்மேன் போட்டி: வெற்றிகரமாக முடித்த அண்ணாமலை.. பாராட்டிய பிரதமர் மோடி!
இந்த சம்பவத்தை தொடர்ந்து, டெல்லி விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் நகரம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையிலும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
நவம்பர் 9, 2025 தேதியான நேற்று, பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடவும் ஆயுதங்களை வழங்கவும் சதி செய்ததாக கூறப்படும் மூன்று சந்தேகநபர்களை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) கைது செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் டெல்லி முழுவதும் பதட்டம் நிலவுகிறது.