பயணிகளுக்கு அதிர்ச்சி.. அதிரடியாக உயர்ந்த ரயில் கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
Indian Railway Ticket Fare Hike : 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் விரைவு ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை உயருகிறது என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கு பிறகு, ரயில் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, எந்தெந்த ரயில்களுக்கு கட்டணம் உயர்வு என்பது போன்ற விவரத்தை பார்ப்போம்.

சென்னை, ஜூன் 30 : 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் விரைவு ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை உயருகிறது என ரயில்வே அமைச்சகம் (Ministry Of Railway) அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கு பிறகு, ரயில் கட்டணம் (Train Ticket Price) தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏசி அல்லாத பெட்டிகளுக்கான கட்டணம் கிலோமீட்டருக்கு 1 பைசாவும், ஏசி வகுப்புகளுக்கான கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், 500 கிலோமீட்டர் வரையிலான தூரங்களுக்கு புறநகர் ரயில்கள் மற்றும் சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு எந்த கட்டணமும் உயர்த்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு முக்கிய போக்குவரத்து சேவையாக இருப்பது ரயில்வே.
அதிரடியாக உயர்ந்த ரயில் கட்டணம்
மேலும், படுக்கை வசதி, ஏசி வசதிகளுடன் படுக்கை வசதி போன்றவை இருப்பதால், நீண்ட தூரம் செல்லும் பயணிகள் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் சேவை ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இப்படியான சூழலில், பயணிகளுக்கு அதிர்ச்சி தரும் செய்து வந்துள்ளது. அதாவது, இந்தியன் ரயில்வே ரயில் கட்டணத்தை உயர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏசி அல்லாத சாதாரண இரண்டாம் வகுப்பு ரயில்கள், புறநகர் ரயில்களில் 500 கிலோ மீட்டர் வரை எந்த கட்டண உயர்வு இல்லை.




501 முதமல் 1500 கிலோ மீட்டருக்கு வரை ரயில் கட்டணம் ரூ.5 ஆகவும், 1500 முதல் 2500 கிலோ மீட்டருக்கு ரூ.10 ஆகவும், 2501 முதல் 3000 கிலோ மீட்டருக்கு ரூ.15-ஆகவும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி அல்லாத சாதாரண ஸ்லீப்பர் ரயில்களின் டிக்கெட் கட்டணம் அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
ஏசி வகுப்பு அல்லாத ஸ்லீப்பர், முதல் வகுப்பு, 2ஆம் வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு தலா ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சாதாரண குளிர்சாதன ரயில் வகுப்புகள், ஏசி 3ஆம் வகுப்புகள், ஏசி 2ஆம் வகுப்புகள், ஏசி முதல் வகுப்பு பெட்டிகளுக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், புறநகர் ரயில் மற்றும் சீசன் டிக்கெட்டுகளின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடைசியாக 2020ஆம் ஆண்டு ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.
மற்ற மாற்றங்கள்
ரயில் டிக்கெட் கட்டணம் மட்டுமின்றி, 2025 ஜூலை 1ஆம் தேதி ரயில்வேயில் பல மாற்றங்கள் வர உள்ளது. அதன்படி, 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் ஆதாரை இணைந்த பயணிகள் மட்டும் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாகவே வெளியிடுவதாக ரயில்வே அறிவித்திருக்கிறது.