Vijay Sethupathi : மாஸ்டரில் விஜய் சாரின் வசனத்தை மாற்றம் செய்தேன்- விஜய்சேதுபதி
Vijay Sethupathi Master Movie : தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வசத்தில் வைத்திருப்பவர் விஜய் சேதுபதி. இவர் முன்னதாக பேசிய பேட்டி ஒன்றில், மாஸ்டர் படத்தில் விஜய் சாரின் வசனத்தை வித்தியாசமாகச் செய்ததை பற்றி ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்கள் வெளியாகியிருக்கிறது. கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம்வரும் இவர் அடுத்தடுத்த படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஏஸ் (Ace). இந்த படத்தில் இயக்குநர் ஆறுமுக குமார் (Arumuga Kumar) இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருந்தார். இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமாகும். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படமானது கடந்த 2025, மே 23ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு போதிய ப்ரோமோஷன் இல்லாத காரணத்தால் இப்படம் ரிலீசானதே பல ரசிகர்களுக்குத் தெரியாது என்றே கூறலாம். இது குறித்தது நடிகர் விஜய் சேதுபதி கூட மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த படத்தில் கதைக்களம் அருமையாக இருந்தாலும் கூட, திரையரங்குகளில் அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை.
ஓடிடியில் வெளியான பின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில், விஜய்யுடன் (Vijay) மாஸ்டர் (Master) படத்தில் நடித்தது பற்றியும், அந்த படத்தில் விஜய்யுடன் இருந்த வசனம் பற்றியும் ஓபனாக பேசியிருந்தார். அதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.




மாஸ்டர் படம் குறித்து விஜய் சேதுபதியின் பதிவு :
View this post on Instagram
விஜய்யின் வசனம் பற்றி விஜய் சேதுபதி பேச்சு :
அந்த நேர்காணலில் நடிகர் விஜய் சேதுபதி, “மாஸ்டர் படத்தில் விஜய் சாருடன் போன் காலில் பேசுவதுபோல உள்ள ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியின் போது லோகேஷ் கனகராஜ் என்னிடம், “வாத்தி ஐ அம் வெய்டிங் என்று சொல்ல சொன்னார். நான் உடனே யோசித்தேன் நான் அப்படியே சொன்னால் விஜய் சாரின் வசனமாகிவிடும், அதில் ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யம் இருக்காது, விஜய் சார் பேசிய வசனத்தை பார்த்துத்தான் ரசிகர்கள் என்ஜாய் பண்ணவேண்டும் ஆனால் இதில் அவ்வாறு இருக்காது என்று நான் யோசித்தேன். நான் உடனே லோகேஷிடம் அவ்வாறு வேண்டாம், நான் சொல்கிறது போல, ” வாத்தி நான் சொல்கிறது உனக்கு புதுசு இல்லை, நான் சொல்கிறது கேளு ” என்று நானா மற்ற சொன்னேன்.
அப்போதுதான் நான் அடுத்து என்ன சொல்லப் போகிறேன் என்று ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அதைப்போல அந்த வசனத்தைக் கூறி, நான் சில வினாடிகளுக்கு அமைதியாகவே இருந்தேன். அந்த அமைதியில் நான் அடுத்து என்ன சொல்லப் போகிறேன் என்பது ரசிகர்களுக்குத் தெரியாது. நான் விஜய் சாரின்எந்த டயலாக்கையும் சொல்லலாம் என அவர்களுக்குத் தெரியும். பின் லோகேஷிடம் நான் நீ சொன்ன முதல் வசனத்தையும் கூறுகிறேன், பின் இந்த வசனமும் இருக்கட்டும். படத்தின் எடிட்டிங் போது என்று நன்றாக இருக்கிறது என்று நீயே முடிவு செய்துகொள் என்றுதான், நான் லோகேஷிடம் கூறினேன்” என நடிகர் விஜய் சேதுபதி ஓபனாக பேசியிருந்தார்.