AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்.பி.செளத்ரி சாலை விபத்தில் காலமானார்

Super Good Films production company founder R.B. Choudary passes away | தென்னிந்திய சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவாவின் தந்தையுமான தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் காலமானார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்.பி.செளத்ரி சாலை விபத்தில் காலமானார்
ஆர்.பி.செளத்ரி Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 May 2026 19:23 PM IST

கடந்த 1988-ம் ஆண்டு சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. மேலும் மலையாள சினிமாவில் கடந்த 1988-ம் ஆண்டு அதிபபம் என்ற படத்தை முதன் முதலாக தயாரித்தார். அதனைத் தொடர்ந்து சுமார் 3 படங்களை வரிசையாக மலையாள சினிமாவில் தயாரித்து வந்த ஆர்.பி.சௌத்ரி தமிழ் சினிமாவில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் தனது சூப்பர் குட் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரிக்க தொடர்ங்கினார். அதன்படி முதலாவதாக தமிழ் சினிமாவில் புது வசந்தம் என்ற படத்தை தயாரித்தார். இயக்குநர் விக்ரமன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர்கள் முரளி, ஆனந்த்பாபு, ராஜா மற்றும் சார்லி முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். தமிழ் சினிமாவில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது தயாரிப்பில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் இரண்டு மகன்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோரையும் நாயகன்களாக தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக அறிமுகம் செய்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read… தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்த தளபதி விஜய் – கொண்டாடும் கோலிவுட் பிரபலங்கள்

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்.பி.செளத்ரி காலமானார்:

இறுதியாக ஆர்.பி.சௌத்ரி தமிழ் சினிமாவில் மாரீசன் என்ற படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். இந்தப் படமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் இன்று நடந்த சாலை விபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி காலமனார். உதய்பூர் ஆர்.பி.சௌத்ரியின் பூர்வீகம் ஆகும். அங்கு வழக்கம் போல சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து சென்றும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் நாளை 06-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உடல் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பிரபல தயாரிப்பாளரின் மறைவிற்கு திரையுல பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… விஜய் தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்கள் நேரம் மாற்றம்.. எந்தெந்த சீரியல் தெரியுமா?

Follow Us