Cinema Rewind : உடை குறித்த ஒரே கண்டிஷன்.. சினிமா வாழ்க்கை குறித்து பேசிய சரண்யா
Saranya Ponvannan About Costumes : கோலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல கதாநாயகியாக வலம்வந்தவர் சரண்யா பொன்வண்ணன். நாயகன் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்நிலையில், இவர் முன்னதாக பேசியிருந்த பேட்டி ஒன்றில், படங்களில் ஆபாசமாக உடையணிவதை தவிர்த்ததை பற்றிப் பேசியுள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன் (Saranya Ponvannan). கடந்த 1987ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) நடிப்பில் வெளியான நாயகன் (Nayakan) என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் அருமையாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து நடிகை சரண்யா பொன்வண்ணன் அசத்தியிருந்தார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய படங்களிலே அதிகம் பேசப்பட்ட திரைப்படமாகவும் இந்த நாயகன் படமானது இருக்கிறது. இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து நடிகை சரண்யா பொன்வண்ணன்.
மலையாளத்திலும் நடிகர் மம்முட்டியின் (Mammootty) நடிப்பில் வெளியான அர்த்தம் (Artham) என்ற படத்தில் நடித்து, அங்கும் கதாநாயகியாக வலம்வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் நடிகை சரண்யா பொன்வண்ணன் இணைந்து நடித்திருக்கிறார். தமிழில் இவரின் நடிப்பில் பல ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது.
பின் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவந்த இவர் உடன் கருத்தம்மா படத்தில் நடித்த நடிகரும், இயக்குநருமான பொன்வண்ணன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் படங்களை ஹீரோயினாக நடிப்பதைத் தவிர்த்துக்கொண்டார். பின் சுமார் 8 வருடங்களுக்குப் பின் மீண்டும் சினிமாவில் அலை என்ற படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்.




அதை தொடர்ந்து படங்களில் அம்மா கதாபாத்திரம், அக்கா கதாபாத்திரம் மற்றும் சிறப்புக் கதாபாத்திரம் போன்ற ரோல்களில் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ண முன்னதாக பேசிய பேட்டி ஒன்றில், தனது சினிமா ஆரம்பத்திலே படங்களில் உடையணிவது பற்றி எடுத்த முடிவு பற்றி ஓபனாக பேசியுள்ளார்.
சினிமாவில் ஆரம்பத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் எடுத்த முடிவு :
முன்னதாக பேசிய பேட்டி ஒன்றில் நடிகை சரண்யா பொன்வண்ணன், “நான் ஆரம்பத்தில் சினிமாவில் ஹீரோயினாக வரும்போது, ஆபாசமாக உடையணியமாட்டேன். அது எனது தனிப்பட்ட விருப்பமும் கூட என்று சொல்லலாம்.அதற்காக அவ்வாறு உடையணிந்து நடிப்பவர்களை நான் தவறு என்றும் கூறவில்லை, அது அந்தந்த நடிகர்களின் விருப்பம். நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையில், நான் சிறுவயதிலிருந்து , நான் கல்லூரி செல்லும் வரையிலும் எந்தவிதமான கை பாகம் இல்லாத சட்டை கூட போட்டது இல்லை. ஏனென்றால் எனக்கு அது சுத்தமாகப் பிடிக்காது. அதனால் ஆரம்பத்தில் நான் படத்தில் நடிக்கும்போது அந்த விஷயம் மட்டும்தான் எனது முதல் கண்டீஷனாகவே இருந்தது.
என்னுடைய அதிர்ஷ்டத்திற்கு அது தேவையும் படவில்லை, மேலும் யாரும் நீ அந்தமாதிரி உடை போட்டால்தான் நடிக்கவேண்டும் என்றும் என்னிடம் கூறவில்லை. எனது முகமும் கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடிப்பதுபோலவும் அமைந்துவிட்டது, அதனால் என்னிடமும் யாரும் மார்டன் உடையணிந்துதான் நடிக்கவேண்டும் என்று கேட்கவில்லை. மேலும் மார்டன் உடையணிந்து நடிக்கும் நடிகைகளுக்குத்தான் முன்னுரிமை அதிகமாக இருக்கும், அவர்கள்தான் உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பார்கள் என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் ஓபனாக பேசியிருந்தார்.