Cinema Rewind : அந்த நடிகர்களுக்கு மட்டும் அம்மாவாக நடிக்கமாட்டேன்.. நடிகை சரண்யா பொன்வண்ணன் சொன்ன விஷயம்!
Saranya Ponvannan : தமிழ் சினிமாவில் 90ஸ் திரைப்படங்களில் முன்னணி நாயகியாக நடித்தது வந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் தற்போது படங்களில் முக்கிய வேடங்களிலும் மற்றும் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் சில நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார், அது யார் என்பது பற்றிப் பார்க்கலாம்.

இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam) நாயகன் (Nayakan) மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன் (Saranya Ponvannan) . இவர் கடந்த 1987ம் ஆண்டு வெளியான இந்த நாயகன் படத்தில் கமல்ஹாசனுக்கு (Kamal Haasan) ஜோடியாக நடித்திருந்தார். தனது முதல் படத்திலே கமலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படமானது வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். என் ஜீவன் பாடுது, சிவப்பு தாலி, தாயம் ஒன்னு, என பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் பிரபல துணை நடிகர் பொன்வண்ணன் (Ponvannan) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரின் திருமணம் கடந்த 1995 ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இப்போது இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் சுமார் 8 வருட காலமாக இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதன் பின் படங்களில் கதாநாயகியாக அல்லாமல் அம்மா மற்றும் துணை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அவர் சினிமாவில் ரீஎண்டரி ஆனா படம் அலை. சிலம்பரசனின் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். பின் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படத்தின் மூலம் பிரபலம் பெற்றார். இந்த படத்தில் ஜீவாவின் அம்மாவாக நடித்து அசத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் அம்மாவாக நடித்தது ஹிட் கொடுத்திருக்கிறார்.
மேலும் இவர் இறுதியாக தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ண முன்னதாக பேசியிருந்த பேட்டி ஒன்றில் அந்த நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கமாட்டேன் என்று கூறினார். அந்த நடிகர்கள் வேறு யாருமில்லை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால்தான் . அவர் பேசியதை பற்றி விவரமாகப் பார்க்கலாம்.
நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசிய விஷயம் :
முன்னதை பேசிய நேர்காணல் ஒன்றில், தொகுப்பாளர் ரஜினி சாருடன் அம்மா கேரக்டரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று கேட்டிருந்தார். அதற்கு நடிகை சரண்யா பொன்வண்ணன். நான் ரஜினி சாருடனும், மோகன்லால் சாருடனும் ஜோடியாகத்தான் நடிப்பேன். அம்மாவாக அமைத்தும் அவர்களுடன் நடிக்கமாட்டேன், அப்படி அவருடன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் வேண்டாம். ஏனென்றால் அவர்கள் இருவரும் எனது இதயம் கவர்ந்த நடிகர்கள், அவர்கள் மீது அவ்வளவு பிரியம்.
நான் ஸ்கூல் படிக்கும்போதில் ரஜினிகாந்த் ரசிகை. அப்போது அவரின் புகைப்படங்களை எல்லாம் எனது பீரோவில் ஒட்டி ஒட்டி வைப்பேன். எனது அம்மா அதைக் கிழித்துக் கிழித்து போடுவார்கள். இந்த மாதிரியாக நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகை நான் என்று நடிகை சரண்யா பொன்வண்ண கூறியிருந்தார்.