Cinema Rewind : அதற்குப் பாலா சார்தான் காரணம்.. நடிகர் சூர்யா சொன்ன உண்மை!
Suriya Talk About Director Bala : நடிகர் சூர்யாவின் நடிப்பில் தமிழில் கிட்டத்தட்டப் பல படங்கள் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான படம்தான் நந்தா. இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகர் சூர்யா முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார், அது குறித்துப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் பல தோல்வி படங்களை அமைந்தாலும் தளராமல் , தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் ரெட்ரோ (Retro) என்ற படமானது வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்க, சூர்யா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தை இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். சூர்யாவின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooaja Hegde) நடித்திருந்தார். இவர்களின் கூட்டணியில் வெளியான இப்படம், மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இயக்குநர் பாலாவின் (Bala) இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா (Nandhaa) படம் தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த 2001ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூர்யா , லைலா, ராஜ்கிரண் உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் சூர்யாவின் வெற்றிப் படங்களில் முதன்மையான படமாக அமைந்துள்ளது. இந்த படமானது முற்றிலும் எமோஷன், காதல் மற்றும் குடும்பம் என மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. சூர்யாவின் நடிப்பில் 2000ம் ஆண்டுகளில் வெளியான வெற்றிப் படத்தில் இதுவும் ஒன்று என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு இந்த படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பும் மிகவும் அருமையாக அமைந்திருந்தது. இந்நிலையில், இந்த படத்தில் நடித்தது குறித்தும், இயக்குநர் பாலாவின் படங்கள் குறித்தும் நடிகர் சூர்யா முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார், அது குறித்துப் பார்க்கலாம்.




நடிகர் சூர்யா பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில் நடிகர் சூர்யா, “நான் நந்தா படத்தில் நடிக்கும்போது சூர்யாவாக இல்லை, முழுமையாக நந்தா கதாபாத்திரத்திற்குள் போய்விட்டேன். கிட்டத்தட்ட இந்த படத்திற்காகப் பாலா சாருடன் சுமார் ஒன்றரை வருடம் வேலை செய்தேன். அந்த படத்தில் நடிக்கும்போதுதான், படத்தில் கதாபாத்திரமாக முகத்தில் எதாவது மாற்றமோ செய்துவிட்டால் முழுவதும் நடிகனாகிவிட முடியாது என்று உணர்ந்தேன். நந்தா படத்தில் நான் மிகவும் கோபமான ஆளாக, ஒவ்வொரு வசனத்தையும் அழுத்தி கூறுவேன் அவ்வாறு அந்த படத்தில் நடித்திருந்தேன்.
படத்தில் நடிகர் கண்ணைச் சிமிட்டினாலே அது ஒரு நடிப்பாக இருக்கும். ஏனென்றால் ஒரு நடிகனின் நடிப்பிற்கு அந்த அளவிற்குச் சக்தி உண்டு. கண்ணைச் சிமிட்டாமல் இருந்தால் அது ஒரு கதையை உணர்த்தும், கண்ணை ஒருபுறம் பார்த்தால் அது ஒரு கதையை உணர்த்தும். ஒரு சிறு அசைவு கூட நிறைய விஷயங்களைக் கடத்தும் என்பதை நான் பாலா சாருடன் பணிபுரியும்போது புரிந்துகொண்டேன். அதனால்தான் நந்தா படத்தில் எனது கதாபாத்திரமும் அவ்வாறே அமைந்திருக்கும்” என்று நடிகர் சூர்யா கூறியிருந்தார்.