Cinema Rewind: திருமண வாழ்க்கை.. விஜய்யிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்ட கேள்வி!
Untold Story Of Vijays Marriage : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் தளபதி விஜய். இவரின் நடிப்பில் ஜன நாயகன் படமானது தீவிரமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இவர் முன்னதாக பேசியிருந்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து அப்பா சந்திரசேகர் கேட்ட கேள்வியைப் பற்றிப் பேசியுள்ளார். அதைப் பற்றி விஜய் சொன்னதை முழுமையாகப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர் (S.A. Chandrasekhar). இவர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) தந்தையும் ஆவார். இவரின் திரைப்படங்கள் மூலமாகதான் சினிமாவில் கதாநாயகனாக நுழைந்தார் விஜய். நடிகர் விஜய் கடந்த 1984ம் ஆண்டு வெளியான வெற்றி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். நடிகர் விஜயகாந்த்தின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படத்தில் வெற்றி (Vetri) என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்து எண்ட்ரீ கொடுத்தார். அதைத் தொடர்ந்து 1992ம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு‘ (Naalaiya Theerpu) என்ற படத்தில் முன்னணி நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தையும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்தார்.
இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குநர்களில் படங்களில் முன்னணி கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார் விஜய். தனது சினிமா வாழ்க்கையில் பல தோல்விகள், கடுமையான விமர்சனங்கள் மற்றும் வெற்றிகள் என அனைத்தையும் கடந்து, தற்போது தளபதி விஜய்யாக கோலிவுட் சினிமாவில் இருந்து வருகிறார்.
இவர் அரசியலுக்குள் நுழைந்துள்ள நிலையில், இறுதிப்படமாக ஜன நாயகன் (Jana Nayagan) என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தற்போது விஜய் பேசிய பழைய நேர்காணல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய் தனது திருமணத்தைப் பற்றிப் பேசிய விஷயம் குறித்துப் பார்க்கலாம்.




தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கேட்ட கேள்வி குறித்து விஜய் பேச்சு :
அந்த நேர்காணலில் நடிகர் விஜய், தனது தந்தை திருமணத்தைப் பற்றி கேட்ட கேள்வியைப் பற்றி பேசியிருந்தார். நடிகர் விஜய், “நான் அப்போதுதான் காதலுக்கு மரியாதை படத்தின் ஷூட்டிங் முடித்த வீட்டிற்கு வந்திருந்தேன். அப்போது எனது அப்பா என்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்று கூறினார். நான் பொதுவாக எனது அப்பாவிடம் பேசுவதற்கு பதட்டமாக இருக்கும். ஆனால் அவர் அன்று தனியாகப் பேசவேண்டும் என்று கேட்டது எதாவது முக்கியமான விஷயமாக இருக்கும் என்று, அவரிடம் பேசத் தொடங்கினேன். அவர் என்னிடம் “சங்கீதாவை பற்றி நீ என்ன கூறுகிறாய் ?” என்று கேட்டார்.
அதற்கு நான் அவர் “மிகவும் நல்ல பெண்” என்று கூறினேன். உடனே அப்பா, “நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறியா ?” என்று கேட்டார். நானும் அவர் சொல்லியது கேட்டு அப்படியே ஷாக் ஆகிவிட்டேன். அவர் உடனடியாக கேட்டது எனக்கு என்ன பதில் சொல்ல என்று திகைத்து நின்றேன். நானும் உடனடியாக “ஏன் இப்படி திடீர்ன்னு கேக்குறீங்க?” என்று கேட்டேன், அதற்கு அப்பா “நானும் உன்னுடைய அம்மாவோ பலநாட்களாக உனக்கு சங்கீதாவைத் உனக்கு திருமணம் செய்துவைக்கலாம் என்று நினைத்திருந்தோம். அதான் கேட்டேன்” என்று அப்பா என்னிடம் பேசினார் என்று நடிகர் விஜய் கூறினார்.