Nelson Dilipkumar: ஜெயிலர் 2 பற்றி பேசி பில்டப் செய்ய விரும்பல.. நெல்சன் திலிப்குமார் அதிரடி!
Nelson Dilipkumar About Jailer 2: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் நெல்சன் திலீப்குமார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை பற்றி அப்டேட் கேட்டவர்களுக்கு, தெளிவுபடுத்தும் விதமாக நெல்சன் திலீப்குமார் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா (Kolamaavu Kokila) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar). இந்த படத்தில் முன்னணி நாயகியாக நயன்தாரா (Nayanthara) நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக, தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) வரை பல்வேறு பிரபலங்களின் படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் ஜெயிலர் (Jailer). இந்த படமானது அந்த ஆண்டில் கிட்டத்தட்ட ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்தின் கூட்டணியில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தை இயக்கிவருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மார்ச் மாதம் முதல் தொடங்கிய நிலையில், விரைவில் நிறைவடையுள்ளதாம். இப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டுவரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நெல்சன் திலீப்குமார் சொன்ன விஷயமானது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பிரபல இயக்குநர் முதல் சீரியல் நடிகை வரை.. இணையத்தில் கசிந்த பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்!
ஜெயிலர் 2 திரைப்படம் பற்றி நெல்சன் தீலிப்குமார் பேசிய விஷயம்
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டை கேட்டு ரசிகர்கள், இணையத்தில் பதிவுகளை வெளியிட்டுவரும் நிலையில், அந்த படத்தினைப் பற்றி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பேசியுள்ளார். அதில் அவர், நானா சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் 2 படத்தை பற்றி பேசி பில்டப் செய்ய விரும்பவில்லை. அந்த படமானது நல்லபடியாக வெளியாகட்டும்.
இதையும் படிங்க: காதலே காதலே தனிப்பெரும் துணையே – 7 ஆண்டுகளை நிறைவு செய்தது 96 படம்
மற்ற எல்லாவற்றையும் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் சில விஷங்களை ஏற்காவிட்டாலும் கூட, நமது படங்களை விமர்சிக்க தொடங்கிவிடுவார்கள்” என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2 திரைப்படம் பற்றி ஓபனாக பேசியுள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
ஜெயிலர் 2 ஷூட்டிங் ஆரம்பம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
Muthuvel Pandian’s hunt begins!💥 #Jailer2 shoot starts today🌟@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/v72a7wXpDH
— Sun Pictures (@sunpictures) March 10, 2025
இந்த ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஜெயிலர் படத்தில் நடித்த பிரபலங்களும் இணைந்து நடித்துவருகின்றனர். ஜெயிலர் படத்தில் நடிகர் விநாயகன் முன்னணி வில்லனாக நடித்திருந்த நிலையில், ஜெயிலர் 2ல் நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு முக்கிய வில்லனாக நடித்துவருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படமானது கேரளாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுவருகிறது. அதனால இப்படத்தின் ஷூட்டிங்கும் கேரளாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.