Dhanush : வட சென்னை படத்தில் அன்பு ரோலில் அவர்தான் நடிக்கவிருந்தார்.. தனுஷ் சொன்ன உண்மை!
Dhanush About Anbu Role In Vada Chennai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்களில் ஒன்றுதான் வட சென்னை. இந்த படத்தில் தனுஷ் அன்பு ரோலில் நடித்திருந்த நிலையில், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நடிகர் பற்றி தனுஷ் ஓபனாக கூறியிருந்தார். அந்த நடிகர் யார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

நடிகர் தனுஷ் (Dhanush) தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பல பணிகளைச் செய்து வருகிறார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (Nilavuku En Mel Ennadi Kobam). இந்த படத்தில் நடிகர் தனுஷ் இயக்க அறிமுக நடிகர்கள் பலரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தனது சகோதரியின் மகனான பவிஷ் நாராயண் (Bhavish Narayan) என்பவரைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே வாத்தி படத்தில் சிறு ரோலில் நடித்திருந்த நிலையில், நடிகர் தனுஷின் மூலமாக இப்படத்தில் நடிகராக அறிமுக செய்யப்பட்டார். கடந்த 2025, ஏப்ரல் மாதத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளிலும் தனது படங்களைக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷின் நடிப்பில் இன்று வரையிலும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டுவரும் படம்தான் வடசென்னை . இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம்தான் வடசென்னை. இந்த படத்தில் நடிகர் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.




இந்நிலையில் அவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் தான் நடித்திருந்த அன்பு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் பற்றி ஓபனாக பேசியிருந்தார். அந்த நடிகர் வேறு யாருமில்லை சிலம்பரசன்தான் (Silambarasan). அவர்தான் இப்படத்தில் முதலில் அன்பு கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார் என்று தனுஷ் பேசியிருந்தார். மேலும் இப்படத்தில் தான் அன்பாக நடிக்கக் காரணம் பற்றியும் பேசியுள்ளார்.
சிலம்பரசனின் இன்ஸ்டாகிராம் ரீசென்ட் பதிவு :
View this post on Instagram
வட சென்னை படத்தில் அன்பு கதாபாத்திரம் மற்றும் சிலம்பரசன் பற்றி தனுஷ் பேச்சு :
நடிகர் தனுஷ் முன்னதாக பேசிய நேர்காணலில் அவர், “வெற்றிமாறன் என்னிடம் வடசென்னை படத்தை சிலம்பரசனுடன் பண்ணப்போகிறேன் என்று கூறினார். நானும் அதற்கு அவரிடம் சூப்பர் சார், நன்றாக இருக்கும் பண்ணுங்கள் என்று கூறினேன். மேலும் வெற்றிமாறன் என்னிடம் கால் பண்ணி அமீர் சார் கதாபாத்திரம் போல ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரம் இருக்கிறது குமார் என்ற கதாபாத்திரத்தைப் பண்ணுகிறீர்களா என வெற்றிமாறன் என்னிடம் கேட்டார். அந்த சக்திவாய்ந்த ரோலை பண்ண சொன்னார், அன்பு என்ற கதாபாத்திரம் இப்படத்தில் எவ்வளவு முக்கியமோ அதைப் போல் இந்த கதாபாத்திரம்.
இந்த ரோல் படத்தில் ஒரு 30 நிமிடம் மட்டும் வரும், நீங்கள்தான் நிச்சயம் பண்ணவேண்டும் என்று வெற்றிமாறன் என்னிடம் சொன்னார். நான் உடனே அவரிடம் சார் எனக்குப் பெருந்தன்மை இருக்கிறது, ஆனால் அந்த அளவிற்கு பெருந்தன்மை இல்லை, நானும் சாதாரண மனுஷன்தான் எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று கூறினேன். தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் அந்த குமார் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறினேன் என நடிகர் தனுஷ் ஓபனாக பேசியிருந்தார்.