சினிமாவில் நடிப்பதை விட அதுதான் அதிகம் பிடிக்கும் – நடிகர் தனுஷ் ஓபன் டாக்
Actor Dhanush: கோலிவுட் சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி இயக்குநராகவும் கலக்கி வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது குபேரா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு சினிமவில் நடிப்பதை விட அந்த வேலை செய்யதான் மிகவும் பிடிக்கும் என்று பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன தனுஷ் (Actor Dhanush) தற்போது பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருக்கிறார். இவர் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி தொடர்ந்து படங்களை இயக்கியும் வருகின்றார். இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் குபேரா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. அப்போது ஏஐ மூலம் சினிமாவில் அறிமுகம் ஆன போது இருந்த தனுஷ் தற்போது உள்ள தனுஷ் இடம் பல கேள்விகளைக் கேட்பட்து போல வீடியோ ஒன்றை நிகழ்ச்சி குழு உருவாக்கி இருந்தது. ஏஐ மூலம் உருவாக்கி இருந்த அந்த பழைய தனுஷ் கேட்டும் கேள்விகளுக்கு தற்போது உள்ள தனுஷ் மிகவும் வெளிப்படையாக பதில்களை கூறிவந்தார்.
நடிகர் தனுஷா? இயக்குநர் தனுஷா? எது பிடிக்கும்:
அப்போது அந்த ஏஐ தனுஷ் தற்போது உள்ள தனுஷிடம் நீ கேமரா முன்னாடி நடிக்கவும் செய்யுற, கேமரா பின்னாடி ஆக்ஷன் மற்றும் கட்டும் சொல்ற. இதுல எது உனக்கு பிடிச்ச வேலை என்று கேட்கிறார். அதற்கு தற்போது உள்ள தனுஷ் சற்றும் யோசிக்காமல் தனக்கு ஆக்ஷன் மற்றும் கட் சொல்லும் வேலைதான் பிடிக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆனால் இவங்க எல்லாருமே என் படங்களுக்காக காத்துட்டே இருக்காங்க. அதனால தான் நான் நடிச்சுட்டு இருகேன். ஆமா என் ரசிகர்களுக்காகதான் இயக்குநர் வேலையை தள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து நடிச்சுட்டே இருக்கேன் என்றும் இல்லனா நடிப்பை நிறுத்திவிட்டு இயக்குநராகவே சென்று இருப்பேன் என்றும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் தனுஷ் பேசிய வீடியோ:
“I like being a DIRECTOR more than a ACTOR🌟. Fans are waiting for my films, that’s the reason I prefer being an Actor♥️. Or else I could have stopped acting & gone into direction full time🎬”#Dhanush | #Kuberaapic.twitter.com/q3DeFW5MCZ
— AmuthaBharathi (@CinemaWithAB) June 18, 2025
இயக்குநர் தனுஷ் இயக்கிய படங்கள்:
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன தனுஷ் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டின் மற்றும் பிரசன்னா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் தனது 50-வது படத்தை அவரே இயக்கி நாயகனாக நடித்தார். இந்தப் படம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது அக்கா மகனை வைத்து 2கே இளைஞர்களின் காதல் கதையை மையமாக வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி இருந்தார்.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவில்லை. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் இட்லி கடை படத்தை இயக்கி நடித்துள்ளார். படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.