Karthi : அப்போது மணிரத்னம் சாரிடம் வசமாக சிக்கிவிட்டேன்… கார்த்தி சொன்ன சம்பவம்
Karthi About Funny Incident : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் பல ஹிட் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில், இவர் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும்போது, இயக்குநர் மணிரத்னத்திடம் சிக்கிய சம்பவம் பற்றிப் பேசியுள்ளார்.

நடிகர் கார்த்தி (Karthi), தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தனது அண்ணன் சூர்யாவிற்கு (Suriya) நிகராக பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்த வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக மெய்யழகன் (Maiyazhagan) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டேர்டைமென்ட் நிறுவனமானது தயாரித்திருந்தது. மேலும் இயக்குநர் சி. பிரேம் குமார் (C. Prem Kumar) இந்த படத்தை இயக்கியிருந்தார். இவர் 96 படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளியான மெய்யழகன் படமானது நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தில் கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியும் இணைந்து நடித்திருந்தார்.
இந்த மெய்யழகன் படமானது ஃபீல் குட் திரைப்படமாக அமைந்திருந்தது என்றே கூறலாம். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிகர் நானியின் ஹிட் 3 படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மேலும் ஹிட் 4 படத்தில் இவர்தான் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தி முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் , சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குநர் மணிரத்னத்திடம் (Mani Ratnam )உதவி இயக்குநராக பணியாற்றும்போது நடந்த சம்பவம் பற்றிப் பேசியுள்ளார்.
நடிகர் கார்த்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகர் கார்த்தி சொன்ன நகைச்சுவை சம்பவம் :
முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் கார்த்தி, “நான் உதவி இயக்குநராக பணியாற்றியபோது நடந்த நகைச்சுவையான சம்பவத்தை இதுவரை யாரிடமும் கூறியதில்லை. ஆனால் இங்குக் கூற விரும்புகிறேன். நான் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக மணிரத்னம் சாரிடம் வேலைபார்க்கும்போது, அவர் சாப்பிடுவதற்கு வீட்டுக்குப் போய்விடுவார். மணிரத்னம் சார் 1 மணிக்குப் போனார் என்றால், 3 மணிக்குத்தான் மீண்டும் வருவார். ஒரு 2 மணிநேரமாக நான் ஆபிசில் வெட்டியாகத்தான் இருப்பேன், வேலை எதுவும் இருக்காது . அப்போது நாங்கள் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, எதாவது பண்ணிக்கொண்டு இருப்போம். அன்று என்னவென்றால் கொஞ்சம் அதிகமாகக் குதூகலமாக இருந்துவிட்டேன்.
ஒரு டேபிள் மீது கால் மேல் காலை போட்டுவிட்டு, கண்ணை மூடிக்கொண்டு அப்படியே ஒரு பாடலை பாடினேன். என்ன பாட்டு தெரியுமா, “இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது” என்று பாடலை பாடிக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென கண்ணைத் திறந்து பார்த்தல் மணி சார் எனது முன்னே நிற்கிறார். அவர் அப்போது என்னைப் பார்த்த அவர் எதுவும் சொல்லாமல் அப்படியே திரும்பி உள்ளே போய்விட்டார்” என்று நடிகர் கார்த்தி நகைச்சுவையாகத் தெரிவித்திருந்தார்.