படங்களை இயக்காததற்கு காரணம் அவர்கள் தான் – இயக்குநர் சேரன் ஓபன் டாக்
Director Cheran: தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வந்த சேரன் தற்போது மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் ஏன் படங்களை இயக்குவது இல்லை என்பது குறித்து வெளிப்படையாக பேசியது கவனம் பெற்று வருகின்றது.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் சேரன் (Director Cheran). இவர் இயக்கிய படங்கள் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 1997-ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும், படங்களை இயக்குவது மட்டும் இன்றி நடிப்பதையும் தொடர்ந்து செய்து வந்தார். பிறகு அவர் இயக்கும் படங்களில் அவரே நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நாயகனாக நடித்து வெளியான ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், திருமணம் ஆகிய படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீப காலமாக படங்களை இயக்காமல் இருந்ததற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.
படங்களை இயக்காததற்கு இதுதான் காரணம்:
படங்களை இயக்குவதற்கு முன்பாக இயக்குநர் சேரன் நடிகராக பெயரிடப்படாத பலப் படங்களில் நடிகராக நடித்துள்ளார். அதன் பிறகே இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதற்கு முன்பாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில் இவரது இயக்கத்தில் வெளியான பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, மாயக் கண்ணாடி, பொக்கிஷம் என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் சேரன். இந்த நிலையில் சமீப காலமாக ஏன் படங்களை இயக்குவதில்லை என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சேரனின் எக்ஸ் தள பதிவு:
ஒவ்வொரு குடும்பத்திலும் மூத்தவங்களோட உழைப்பு அவங்க சந்ததி நல்லா வாழ்னும்னுதான்.. அதை மதிக்கவும் அதுக்கு மரியாதை கொடுத்து பெரியவங்களோட ஆசைகள நிறைவேத்துறதும் தான் நாம் அவங்க இந்த குடும்பத்துக்காக தங்களை வருத்திக்கொண்டதற்கு கொடுக்கும் விருது.. பாண்டவர்பூமி என் மனதின் நெருக்கத்தில். https://t.co/KZfBOHsD3O
— Cheran Pandiyan (@CheranDirector) June 8, 2025
அதில் நான் படங்களை இயக்க வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் நான் படங்களை இயக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். பல நல்ல படங்களை இயக்கி 4 தேசிய விருதுகளைப் பெற்ற என்னை தயாரிப்பாளர்கள் புரக்கணிப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை என்றும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
மலையாள சினிமாவில் நடிகரான சேரன்:
மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நரிவேட்ட படத்தில் நடிகர் சேரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் உண்மைச் சம்மவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. படத்தில் நடிகர் சேரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததை ரசிகர்கள் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.