ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45 படத்தின் டைட்டில் இதுவா?
Actor Suriya: நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்தும் கொண்டிருக்கும் போதே அவர் தனது 45-வது படத்திற்காக நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி உடன் கூட்டணி வைப்பதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நடிகர் சூர்யாவிற்கு கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் அவரது படங்களுக்கு ஹிட் கிடைக்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக சூர்யாவின் 44-வது படமான ரெட்ரோ அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். படம் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவின் படம் ஹிட் அடித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யா தனது 45-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்.
சூர்யாவின் 45-வது படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி:
அதன்படி சூர்யாவின் 45-வது படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக அமைந்தது. ஆர்.ஜே.பாலாஜி ரேடியோவில் பணிபுரியும் போதே அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அதனை தொடர்ந்து அவர் நடிகராக மாற ரசிகர்கள் நடிப்பை ரசித்தனர்.
படக்குழு வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு:
We proudly announce #Suriya45 – a groundbreaking collaboration featuring the versatile @Suriya_offl🔥, the musical legend @arrahman❤️, and the talented @RJ_Balaji. A powerful journey begins!💥@prabhu_sr ✨ pic.twitter.com/7O37KDIOqy
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 14, 2024
அதன் பிறகு ஆர்.ஜே.பாலாஜி அவர் நாயகனாக நடிக்கும் படங்களை அவரே இயக்கத் தொடங்கினார். இதுவரை ஆர்.ஜே.பாலாஜியே இயக்கி நடித்த எந்தப் படங்களுக் தோல்வியை சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே சூர்யாவின் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குவதாக வெளியான அறிவிப்பு சூர்யா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சூர்யா 45 படத்தின் டைட்டில் இதுவா?
ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு நடிகர் சூர்யா தனது 45 படத்தின் பணிகளில் விறுவிறுப்பாக பங்கேற்க தொடங்கினார். மேலும் இந்தாப் படத்தில் நாயகியாக நடிகை த்ரிஷா நடித்து வரும் நிலையில் அவர் தனது போர்ஷனை நடித்து முடித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படத்திற்கு வேட்டை கருப்பு என்று பெயர் வைத்துள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் சூர்யாவின் பிறந்த நாள் அன்று அறிவிக்கப்படுக் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் த்ரிஷா உடன் இணைந்து நடிகர்கள் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி நட்ராஜ், அனகா மாயா ரவி சுப்ரீத் ரெட்டி, மற்றும் ஷிவாதா ஆகியோர் நடித்து வருகின்றனர்.