AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத் தேர்தல் 2026.. மறுவாக்குப்பதிவு அவசியமில்லை.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Tamilnadu Assembly Election: சில இடங்களில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், அவை வாக்குப்பதிவை நிறுத்தும் அளவிற்குத் தீவிரமாக இல்லை எனப் பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளனர். மறுவாக்குப்பதிவு குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் கூடிய காப்பறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத் தேர்தல் 2026.. மறுவாக்குப்பதிவு அவசியமில்லை.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Apr 2026 11:31 AM IST

Tamilnadu Polls 2026: தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியமில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெற்ற நாளன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள், சில இடங்களில் நிகழ்ந்த மோதல்கள் மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் அனுப்பப்பட்டன. இந்தப் புகார்கள் குறித்து அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிக்க: தமிழகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெண் சக்தி’: மௌனப் புரட்சி செய்யுமா பெண் வாக்குகள்?

ஆணையத்தின் விளக்கம்:

ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் பெறப்பட்ட ‘ஸ்க்ரூட்டினி’ அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, தேர்தல் ஆணையம் பின்வரும் முடிவுகளை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 68,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் விதிமுறைகளின்படியே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்ட இடங்களில் உடனடியாக மாற்று இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு தடையின்றித் தொடர்ந்தது. இது வாக்குப்பதிவின் முடிவைப் பாதிக்கும் வகையில் அமையவில்லை.

அமைதியான சூழலும், வரலாற்றுச் சாதனையும்:

சில இடங்களில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், அவை வாக்குப்பதிவை நிறுத்தும் அளவிற்குத் தீவிரமாக இல்லை எனப் பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்தத் தேர்தலில் தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2021 தேர்தலை விட 11.52% அதிகமாகும். தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல்’சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்’ (SIR) காரணமாகப் போலி மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால்தான் இந்த அதிகப்படியான வாக்கு சதவீதம் சாத்தியமானது என்பதும் அதிகாரப்பூர்வத் தகவலாகும்.

இதையும் படிக்க: எதிர்க்கட்சி வாக்குகள் சிதறினால் என்னவாகும்?.. தமிழக அரசியல் வரலாறு சொல்லும் இரு முக்கியப் பாடங்கள்..

மே 4 வாக்கு எண்ணிக்கை:

மறுவாக்குப்பதிவு குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் கூடிய காப்பறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வருகிற மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போது எந்தத் தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு இல்லை என்பது உறுதியாகிவிட்டதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போது நேரடியாக வாக்கு எண்ணிக்கை தினத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

Follow Us