PAN Card : இறந்த குடும்ப உறுப்பினர்களின் பான் கார்டை ரத்து செய்வது எப்படி?.. முழு விவரம்!
PAN Card Cancellation Guide | இந்தியாவில் பொதுமக்களுக்கு கட்டாயமாக உள்ள மிக முக்கிய ஆவணங்களில் பான் கார்டு ஒன்று. 18 வயதுக்கு மேல் தனியாக வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் பான் கார்டு வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், இறந்த குடும்ப உறுப்பினரின் பான் கார்டை ரத்து செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய குடிமக்களுக்கு கட்டாயமாக உள்ள ஆவணங்களில் ஒன்றாக உள்ளது தான் பான் கார்டு (PAN Card). பான் கார்டு மூலம் ஒருவர் என்ன என்ன பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார், அதற்கான வருமான வரியை முறையாக செலுத்துகிறாரா என்பது உள்ளிட்டவற்றை தெரிந்துக்கொள்ளலாம். இதன் காரணமாக, 18 வயது முடிந்த தனி வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கு பான் கார்டு கட்டாயமாக உள்ளது. உயிருடன் இருக்கும் நபர்களுக்கு இத்தகைய ஆவணங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இறந்த நபர்களின் அடையாள ஆவணங்களை ரத்து செய்வதும் அவசியமாக உள்ளது. இந்த நிலையில், இறந்த நபரின் பான் கார்டை எப்படி கேன்சல் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய குடிமக்களுக்கு மிக முக்கிய ஆவணமாக உள்ள பான் கார்டு
இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு எவ்வளவு கட்டாயமாக உள்ளதோ அதே அளவுக்கு பான் கார்டும் கட்டாயமாக உள்ளது. ஒருவரின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, பான் காட்டை அரசு கட்டாயமாக வைத்துள்ளது. ஒருவர் எத்தனை வங்கி கணக்குகள் வைத்துள்ளாரோ, அத்தனையும் பான் கார்டின் கீழ் கொண்டுவரப்படும். அதுமட்டுமன்றி, அந்த வங்கி கணக்குகளை பயன்படுத்தி அந்த நபர் என்னென்ன பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார், அதற்கான வருமான வரியை செலுத்துகிறாரா என்பதையும் பான் கார்டு மூலம் மிக சுலபமாக கண்டறிய முடியும். இதன் காரணமாக 18 வயதிற்கு மேல் தனியாக வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்திய அரசு பான் கார்டை கட்டாயமாக வைத்துள்ளது.
இறந்தவரின் பான் கார்டை கேன்சல் செய்வது எப்படி ?
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரது அடையாள ஆவணங்கள் செயல்பாட்டில் உள்ளது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த நபர் உயிரிழந்த பிறகும் அவரது அடையாள ஆவணங்கள் ரத்து செய்யப்படுவதும் அவசியக் ஆகிறது. இந்த நிலையில், இறந்தவரின் பான் கார்டை எப்படி கேன்சல் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- வருமான வரித் துறையின் மதிப்பீட்டு அதிகாரிக்கு (Assessing Office – AO) கடிதம் எழுத வேண்டும்.
- அந்த கடிதத்தில் உயிரிழந்த நபரின் பெயர், பான் எண், இறந்த தேதி மற்றும் பான் கார்டை ரத்து செய்வதற்கான உங்கள் கோரிக்கையை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
- இறந்த நபருக்கும் உங்களுக்குமான உறவை குறிப்பிட்டு அதற்கு சான்றாக கையெழுத்து இட வேண்டும்.
- இந்த கடிதத்துடன் இறந்த நபரின் இறப்பு சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும்.
- பிறகு இந்த கடிதம் மற்றும் அதற்கு உரிய ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து மதிப்பீட்டு அதிகாரியின் அலுவலகங்கள் சமர்பிக்க வேண்டும். அல்லது மதிப்பீட்டு அதிகாரியின் அலுவலக முகவரிக்கு அஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கலாம்.
மேற்குறிப்பிட்ட நடைமுறையை பின்பற்றி பான் கார்டு ரத்துக்காக விண்ணப்பிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகளுக்கு பிறகு ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.