நேபாள பெரு வெள்ளத்துக்கு காரணம் என்ன? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!
Nepal Floods Reason : நே பாள நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கான காரணத்தை அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதில், என்ன காரணம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்த வெள்ளத்தால் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர் .
நேபாள நாட்டில் இன்று காலை திடீரென பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், ஏராளமானோர் உயிரிந்த நிலையில் இந்த வெள்ளப்பெருக்குக்கான காரணத்தை அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு பனிப்பாறை ஏரி உடைப்பை காரணம் ஆகும். இதனால், நாராயணி, கண்டக் கரையோர மக்கள் தாழ்வான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் . இந்திய எல்லைப் பகுதி கிராமங்களுக்கும் நேரடி ஆபத்து உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் 40-க்கும் மேற்பட்ட சாலைகள், மேம்பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்கள் தனி தீவுகளாக துண்டிக்கப்பட்டுள்ளது.
சீன எல்லை அருகே உள்ள ரசவா மாவட்டத்தில் போதை கோஷியாற்றி இன்று காலை திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தை சேர்ந்த 49 பேரின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. இந்த சம்பவத்தில் மீட்கப்பட்டவர்கள் நேபாள ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மிகவும் பேரழிவை ஏற்படுத்திய இந்த திடீர் வெள்ளப் பெருக்கத்திற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் தீபத்துக்கு அருகே உள்ள உயரமான பகுதிகளில் இருந்து உருவாகும் பணியாற்று ஏரி வெடித்ததன் காரணமாகவே இந்த கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)