AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிபர் டிரம்பின் வரி விதிப்பு.. அமெரிக்காவிற்கான தபால் சேவையை நிறுத்திய இந்தியா..

Indian Postal Service To US: சமீபத்தில் அதிபர் டிரம்ப், இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பை அறிவித்தார். இதன் காரணமாக அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.

அதிபர் டிரம்பின் வரி விதிப்பு.. அமெரிக்காவிற்கான தபால் சேவையை நிறுத்திய இந்தியா..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Aug 2025 18:46 PM IST

டெல்லி, ஆகஸ்ட் 23, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க வரி விதிகள் காரணமாக அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ “ஜூலை 30, 2025 அன்று அமெரிக்க நிர்வாகம் வெளியிட்ட நிர்வாக உத்தரவு எண். 14324 ஐ அஞ்சல் துறை கவனத்தில் கொண்டுள்ளது, இதன் கீழ் 800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருட்களுக்கான வரி இல்லாத குறைந்தபட்ச விலக்கு ஆகஸ்ட் 29, 2025 முதல் திரும்பப் பெறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இதன் விளைவாக, அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும்,

அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல், அந்தந்த நாட்டிற்குரிய சர்வதேச அவசர பொருளாதார சக்தி சட்டம் (IEEPA) கட்டண கட்டமைப்பின்படி சுங்க வரிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இருப்பினும், 100 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து வகையான தபால் சேவைகள் நிறுத்தி வைப்பு:

சர்வதேச அஞ்சல் வலையமைப்பு அல்லது அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அங்கீகரித்த பிற “தகுதிவாய்ந்த தரப்பினர்” மூலம் சரக்குகளை வழங்கும் போக்குவரத்து கேரியர்கள், அஞ்சல் சரக்குகளுக்கான வரிகளை வசூலித்து அனுப்ப வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஆகஸ்ட் 15, 2025 அன்று CBP சில வழிகாட்டுதல்களை வெளியிட்ட போதிலும், “தகுதிவாய்ந்த தரப்பினர்” என்ற பதவி மற்றும் வரி வசூல் மற்றும் பணம் அனுப்புவதற்கான வழிமுறைகள் தொடர்பான பல முக்கியமான செயல்முறைகள் வரையறுக்கப்படவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது.. பகீர் குற்றச்சாட்டு.. பின்னணி என்ன?

செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப தயார்நிலை இல்லாததால் அமெரிக்கா செல்லும் விமான நிறுவனங்கள் தபால் சரக்குகளை ஏற்க இயலாமையை வெளிப்படுத்தியுள்ளதாக தபால் துறை தெரிவித்துள்ளது. எனவே, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து வகையான தபால் பொருட்களின் முன்பதிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

இயல்பு நிலைக்கு சூழலை விரைவில் கொண்டு வர முடிவு:

அதோடு, “அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்து, வளர்ந்து வரும் சூழ்நிலையை துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் சேவைகளை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலைகளால் அமெரிக்காவிற்கு அனுப்ப முடியாத பொருட்களை ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. இந்தியர்களுக்கு நேர்ந்த சோகம்.. 5 பேர் பலி!

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து வரும் பின்னணியில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு கூடுதலாக 25% அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us