Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Donald Trump

Donald Trump

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45வது மற்றும் 47வது அதிபர் ஆவார். ஜனவரி 20, 2025 அன்று அவர் பதவியேற்றதைத் தொடர்ந்து , டிரம்ப் தொடர்ச்சியாக இரண்டு முறை பதவி வகித்த இரண்டாவது ஜனாதிபதியானார் , முதலாவது ஜனாதிபதி குரோவர் கிளீவ்லேண்ட் ஆவார். 78 வயதில், பதவியை வென்ற மிக வயதான அதிபர் டிரம்ப் ஆவார். டொனால்ட் டிரம்ப் ஜூன் 14 1946 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தவர். ஆரம்பக்காலத்தில் டொனால்ட் டிரம்ப் தனது தந்தையின் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார், 1970களில் அதன் தலைமையை ஏற்றுக்கொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடும் தனது விருப்பத்தை அறிவித்தார், மேலும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த முதன்மைத் தேர்தல்களில், அவருக்கு எதிரான சட்ட வழக்குகளில் நிலையான முன்னேற்றம் இருந்தபோதிலும், தனது கட்சியின் வேட்புமனுவை வெல்ல போதுமான பிரதிநிதிகளை அவர் குவித்தார். பின்னர் இரண்டாவது முறையாக 47வது அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

Trump Spoke About Deal With India | விரைவில் இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று (நவம்பர் 11, 2025) வெள்ளை மாளிகையில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயரானார் ‘ஸோரான் மம்தானி’!

Zohran Mamdani: தேர்தல் பிரசாரத்தின் போது ஸோரான் மம்தானி வெற்றி பெறக் கூடாது, மீறி வென்றால், நியூயார்க் நகருக்கு வழங்கப்படும் பெடரல் வங்கியின் நிதி நிறுத்தப்படும் என நியூயார்க் நகர வாக்களார்களை டிரம்ப் கடுமையாக எச்சரித்திருந்தார். எனினும், நியூயார்க் நகர மக்கள் அவரை பொருட்படுத்தவில்லை.

அணு ஆயுத சோதனையில் இறங்கும் அமெரிக்கா.. டிரம்ப் அதிரடி உத்தரவு.. காரணம் என்ன?

America Nuclear Weapon Test | ரஷ்யா தொடர்ந்து தனது அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (அக்டோபர் 30, 2025) மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று சந்திக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்.. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!

Trump-Xi Jinping Meeting in South Korea | தென் கொரியாவில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க உள்ளார். அதற்காக இன்று (அட்கோபர் 30, 2025) தென் கொரியா செல்லும் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளார்.

ஆசிய நாடுகளுக்கு 5 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப்.. முக்கியத்துவம் என்ன?

American President Donald Trump's Asia Tour | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்கு செல்ல உள்ளார். அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அவர் அதிபராக பதவியேற்ற நிலையில், தற்போது முதல் முறையாக அவர் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முடிவுக்கு வந்த போர்.. வீடு திரும்பும் பணயக் கைதிகள்.. இஸ்ரேல் விரைந்த அதிபர் டிரம்ப்..

Operation Returning Home: ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மூன்று வெவ்வேறு குழுக்களாக பணயக்கைதிகளை விடுவிக்கும், அவர்களில் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. முதல் இரண்டு குழுக்கள் காலை 10:30 மணிக்குள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது, மூன்றாவது குழு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்படும்.

சீனாவுக்கு பெரிய தலைவலி.. 100 சதவீதம் வரியை அறிவித்த டிரம்ப்.. என்ன மேட்டர்?

US Tariffs On China : 2025 நவம்பர் 1ஆம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுககு கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

டிரம்ப்பிற்கு இல்லை… அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. யார் இந்த மரியா கொரினா?

Nobel Peace Prize 2025 : 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடிய மரியா கொரினா மச்சோடாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் கூறி வந்தார்.

அமைதிக்கான நோபல் பரிசு.. அதிபர் டிரம்ப் தான் தகுதியானவர் – பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்..

Noble Prize For Peace: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிபர் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , “அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை கொடுங்கள். அவர் அதற்கு தகுதியானவர்” என தெரிவித்துள்ளார்.

தாமதத்தை பொறுத்துக்கொள்ள மாட்டேன் – ஹமாஸுக்கு டிரம்பின் கடைசி எச்சரிக்கை!

Trump Gaza Ultimatum Final Warning : காசா அமைதி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்து அமைதிக்கு உடன்படாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்.. செலவினங்களுக்கு சிக்கல்.. காரணம் என்ன?

US Government Shutdown | அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசு புதிய மசோதாவை அறிமுகம் செய்ய கொண்டு வந்தது. ஆனால், அந்த மசோதாவுக்கு ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அது இயற்றப்படாமல் உள்ளது. இதன் விலைவாக ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அமெரிக்க அரசு நிர்வாகம் தற்போது முடங்கியுள்ளது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருத்துகளுக்கு 100% வரி – அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி..

100% Tax On Medicine: தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய முடிவின்படி, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா 100 சதவீத வரி விதிக்கும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

H1B Visa : எச்1பி விசா கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. அமெரிக்க அரசு அதிரடி!

White House on H1B Visa | டொனால்ட் டிரம்ப் எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தி வெளியிட்டுள்ள உத்தரவு செப்டம்பர் 20, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

H-1B Visa: H-1B விசா கட்டணத்தை உயர்த்திய ட்ரம்ப்.. இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு!

Donald Trump: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், H-1B விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளார். இது இந்தியத் தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும். அமெரிக்க தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களை சிறப்புத் துறைகளில் பணியமர்த்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் அச்சுறுத்தல் நாடுகள்.. இந்தியா பெயரை சேர்த்த ட்ரம்ப்!

Donald Trump: அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் உட்பட 23 நாடுகளை பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தல் அல்லது உற்பத்தி செய்யும் நாடுகளாக அறிவித்துள்ளார். இந்த நாடுகளின் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.