AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Donald Trump

Donald Trump

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45வது மற்றும் 47வது அதிபர் ஆவார். ஜனவரி 20, 2025 அன்று அவர் பதவியேற்றதைத் தொடர்ந்து , டிரம்ப் தொடர்ச்சியாக இரண்டு முறை பதவி வகித்த இரண்டாவது ஜனாதிபதியானார் , முதலாவது ஜனாதிபதி குரோவர் கிளீவ்லேண்ட் ஆவார். 78 வயதில், பதவியை வென்ற மிக வயதான அதிபர் டிரம்ப் ஆவார். டொனால்ட் டிரம்ப் ஜூன் 14 1946 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தவர். ஆரம்பக்காலத்தில் டொனால்ட் டிரம்ப் தனது தந்தையின் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார், 1970களில் அதன் தலைமையை ஏற்றுக்கொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடும் தனது விருப்பத்தை அறிவித்தார், மேலும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த முதன்மைத் தேர்தல்களில், அவருக்கு எதிரான சட்ட வழக்குகளில் நிலையான முன்னேற்றம் இருந்தபோதிலும், தனது கட்சியின் வேட்புமனுவை வெல்ல போதுமான பிரதிநிதிகளை அவர் குவித்தார். பின்னர் இரண்டாவது முறையாக 47வது அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் சலசலப்பு.. உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. என்னதான் நடக்குது?

Donald Trump : அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் ஈரானின் பதில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததிலிருந்து கச்சா எண்ணெய் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை – அமெரிக்க துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடி கருத்து

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒரு ஹோட்டலில் சமீபத்தில் நடந்த பாதுகாப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப், முதல் பெண்மணி மற்றும் துணை அதிபர் ஆகியோர் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளனர் என்பதை அறிந்து நிம்மதியடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இது குறித்து பார்க்கலாம்

துப்பாக்கிச்சூடு.. நூலிழையில் தப்பித்த ட்ரம்ப்.. அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் அதிபர் டிரம்ப் கலந்துகொண்ட இரவு விருந்தின்போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. டிரம்ப்பும் ஜே.டி. வேன்ஸும் அங்கு இருந்தனர். பாதுகாப்புப் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு, அதிபரைப் பாதுகாப்பாக வெளியேற்றினர், மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார். அதிபருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை

லெபனான் – இஸ்ரேல் இடையே மேலும் 3 வாரங்களுக்கு போர் நிறுத்தம்.. டிரம்ப் அறிவிப்பு!

Three More Weeks Ceasefire Between Israel and Lebanon | ஈரான் - இஸ்ரேல் போரில் ஈரானுக்கு ஆதரவாக லெபனான், இஸ்ரேலை தாக்கியது. இதன் காரணமாக இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே கடும் மோதல் நிலவியது. இந்த நிலையில், மூன்று வாரங்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

ஹோர்முஸில் பதற்றம் அதிகரிப்பு.. சிறிய ஈரானியப் படகுகளை அழிக்க டிரம்ப் உத்தரவு

US – Iran Talk: ஈரான் அமெரிக்க போர் ஒரு முடிவுக்கும் வரவில்லை. இந்த நிலையில் தற்போது ஹோர்முஸில் பதற்றம் அதிகரித்துள்ளது. சட்டவிரோத வலையமைப்புகளைச் சீர்குலைக்கவும், ஈரானுக்குப் பொருள்சார் ஆதரவை வழங்கும் கப்பல்கள் எங்கிருந்து இயங்கினாலும் அவற்றை இடைமறிக்கவும், நாங்கள் உலகளாவிய கடல்சார் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்வோம்," என்று பென்டகன் அறிக்கை தெரிவித்தது.

மீண்டும் பேச்சுவார்த்தை.. இஸ்லாமாபாத் செல்லும் வேன்ஸ்.. ஓகே சொல்லுமா ஈரான்?

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்லாமாபாத்திற்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தை, அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் காலாவதியாகும் அதே நாளான ஏப்ரல் 22 அன்று நடைபெறலாம். இதற்கிடையில், ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

US – Iran Talk: தொடரும் பேச்சுவார்த்தை பஞ்சாயத்து.. இறங்கி வராத ஈரான்.. குழப்பத்தில் அமெரிக்கா!

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது. இதற்கிடையில், டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. அழுத்தத்திற்குப் பணிந்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஈரான் கூறுகிறது. போர் நிறுத்தம் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது, மேலும் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த பதற்றம் நீடிக்கிறது.

ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படும் – கடும் எச்சரிக்கை கொடுத்த ஈரான்.. மீண்டும் சிக்கலா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தொடர்ச்சியான சமூக ஊடக அறிக்கைகளுக்கு ஈரான் கடும் கோபத்துடன் எதிர்வினையாற்றியுள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாஃப், டிரம்பின் நடவடிக்கைகளை பொய்ப் பிரச்சாரம் என்று கடுமையாகச் சாடியதோடு, பொய்களைக் கொண்டு போர்களில் வெற்றி பெற முடியாது என்றும் கூறியுள்ளார்

இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம்.. டிரம்ப் அறிவிப்பு!

War Ceasefire Between Israel and Lebanon for Ten Days | ஈரான் போரால் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு நெருக்கடி.. ரஷ்யா – ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கான அமெரிக்காவின் சலுகை ரத்து!

இந்தியா தனது "தேசிய நலனே முதன்மையானது" என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது. குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானது என்பதால், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் இந்தியாவின் இந்த மூலோபாயத் தன்னாட்சியை சோதிப்பதாக அமையும்.

தற்காலிக போர் நிறுத்தத்த்தை நீட்டிக்க அமெரிக்கா – ஈரான் பரிசீலனை?

America - Iran Ceasefire | ஈரான் மீது இரண்டு வாரங்களுக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், தற்போது போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசிய இந்திய பிரதமர் மோடி!

PM Modi Talk With America President Donald Trump | இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடல் சுமார் 40 நிமிடங்கள் நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் அழிக்கப்படும், ஹோர்முஸ் நீரிணை முற்றுகையிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை

Iran vs US: ஈரானில் எஞ்சியிருக்கும் அனைத்தையும் ராணுவம் அழிக்கும் என்றும், இதற்காக அமெரிக்க ராணுவம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈரானுடன் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டாலும், அணுசக்தி விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். .

மீண்டும் போர் வாய்ப்பு?! தோல்வியில் முடிந்த அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தை.. நடந்தது என்ன?

Iran Us war updates : அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளின் தூதுக்குழுக்களுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி.. மீண்டும் பகீர் கிளப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Trump's New Tariff Announcement | ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு ராணுவ ரீதியில் உதவும் நாடுகள் மீது 50 சதவீதம் இறக்குமதி வரி உடனே அமலுக்கு வர உள்ளதாக கூறியுள்ளார்.