Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Donald Trump

Donald Trump

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45வது மற்றும் 47வது அதிபர் ஆவார். ஜனவரி 20, 2025 அன்று அவர் பதவியேற்றதைத் தொடர்ந்து , டிரம்ப் தொடர்ச்சியாக இரண்டு முறை பதவி வகித்த இரண்டாவது ஜனாதிபதியானார் , முதலாவது ஜனாதிபதி குரோவர் கிளீவ்லேண்ட் ஆவார். 78 வயதில், பதவியை வென்ற மிக வயதான அதிபர் டிரம்ப் ஆவார். டொனால்ட் டிரம்ப் ஜூன் 14 1946 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தவர். ஆரம்பக்காலத்தில் டொனால்ட் டிரம்ப் தனது தந்தையின் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார், 1970களில் அதன் தலைமையை ஏற்றுக்கொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடும் தனது விருப்பத்தை அறிவித்தார், மேலும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த முதன்மைத் தேர்தல்களில், அவருக்கு எதிரான சட்ட வழக்குகளில் நிலையான முன்னேற்றம் இருந்தபோதிலும், தனது கட்சியின் வேட்புமனுவை வெல்ல போதுமான பிரதிநிதிகளை அவர் குவித்தார். பின்னர் இரண்டாவது முறையாக 47வது அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தியா உடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது – அதிபர் டிரம்ப் அதிரடி..

India Vs America Trade Talks: இந்திய பொருட்கள் மீது அதிபர் டிரம்ப் சுமார் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்த நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு கானும் வரையில் இந்தியா உடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பீகாரில் டிரம்ப் பெயரில் குடியிருப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் – ஆச்சரிய சம்பவம்

Trump in Bihar?: பீகாரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் குடியிருப்பு சான்றிதழ் சான்று கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

PM Modi: விவசாயிகளின் நலனே முக்கியம்.. சவாலுக்கு நான் தயார்! அமெரிக்க வரி குறித்து பேசிய பிரதமர் மோடி!

PM Modi Responds to US Tariff: அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மீது கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி விவசாயிகளின் நலன் முதன்மை எனக் கூறியுள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்த்து, இந்தியா விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போரின் நலனில் சமரசம் செய்யாது எனவும், அதற்கு எந்த விலை கொடுத்தாலும் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

US Tariffs on India: அமெரிக்காவின் கூடுதல் வரி நியாயமற்றது.. எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசாங்கம்..!

India US Trade Relations: அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25% வரி விதித்ததற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது சந்தை சார்ந்தது எனவும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்காக செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Donald Trump : இந்தியா மீது 50% வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. முழு விவரம்!

Donald Trump Tariff : இந்தியா மீது கூடுதலாக 25% இறக்குமதி வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார். இந்த புதிய வரி மூன்று வாரங்களுக்குப் பிறகு அமலுக்கு வரும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக சேர்க்கப்படும்.

24 மணி நேரத்தில் இந்தியாவின் வரி மேலும் உயரும் – எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

Trump Threatens India : அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்ய வர்த்தகத்தை இந்தியா நிறுத்தாவிட்டால், அடுத்த 24 மணி நேரத்தில் இறக்குமதி வரியை 25%லிருந்து மீண்டும் அதிகரிப்பேன் என எச்சரித்துள்ளார்.

கூடுதல் வரி விதிப்பேன் என மிரட்டிய டிரம்ப்.. விளக்கம் மூலம் பதிலடி கொடுத்த இந்தியா!

India Responds to Donald Trump's Threatening | இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

India - Pakistan War | இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்த சண்டை ஒருசில நாட்களுக்கு பிறகு முடிக்கப்பட்ட நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் இந்த போரை நிறுத்தியதாக இந்தியா கூறும் நிலையில், தனது தலையிடல் காரணமாக தான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.

ரஷ்யா நோக்கி இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப உத்தரவு.. அதிபர் டிரம்ப் அதிரடி..

President Donald Trump: அதிபர் டிரம்ப் கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரை நிறுத்தும்படி பல கட்டங்களில் கேட்டிருந்தார். ஆனால் அது தோல்வி அடைந்தது. இந்நிலையில் அதிபர் டிரம்ப், ரஷ்யா நோக்கி இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Donald Trump : இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% வரியை ஒத்திவைத்த அமெரிக்கா.. புது தேதி என்ன தெரியுமா?

Trump India Tariff : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது அறிவித்த 25% இறக்குமதி வரி, ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவிருந்தது. ஆனால் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதான வரி விதிப்பு, அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என யேல் பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமலுக்கு வரும் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

Donald Trump Tariffs on India : இந்தியா பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

”இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. இப்போ தாய்லாந்து கம்போடியா” – அதிபர் டிரம்ப்..

Thailand Cambodia Ceasefire: எல்லையில் ஏற்பட்ட கன்னிவெடி வெடிப்பில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததை தொடர்ந்து ஜூலை 24, 2025 அன்று இந்த சண்டை தொடங்கியது. இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை தான் தீர்த்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கைது செய்யப்படுவது போன்ற AI வீடியோவை பகிர்ந்த டிரம்ப்.. வெடித்த சர்ச்சை!

Barak Obama AI Video | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனது பேச்சுக்களாலும், செயல்களாலும் அவர் அவ்வப்போது இத்தகைய சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார். அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கைது செய்யப்படுவது போன்ற ஏஐ வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Donald Trump : பிரிக்ஸ் கூட்டமைப்பு விரைவில் மறைந்து போகும்.. டொனால்ட் டிரம்ப் கருத்து!

Donald Trump of BRICS | பிரிக்ஸ் கூட்டமைப்பு மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன் வைத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விரைவில் பிரிக்ஸ் கூட்டமைப்பு மறைந்து போகும் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து டிரம்ப் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Donald Trump : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நரம்பு நோய்..விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை!

Donald Trump Diagnosed with Chronic Venous Insufficiency | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு வகையான நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சமீப காலமாகவே டிரம்பின் கை மற்றும் கால்களில் காயங்கள் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.