AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிலவை நோக்கிய பயணத்தில் புதிய வரலாறு.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஆர்டிமிஸ் 2 விண்வெளி வீரர்கள்..

நாசா அதிகாரிகள், இந்த மிஷனை நிலா ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு முக்கிய படியாக பாராட்டினர். குறிப்பாக, அடுத்ததாக நடைபெறவுள்ள ஆர்டிமிஸ் 3 மிஷன் மூலம் மனிதர்களை மீண்டும் நிலா மேற்பரப்பில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்டிமிஸ் 2 மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், எதிர்கால மிஷன்களுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும்.

நிலவை நோக்கிய பயணத்தில் புதிய வரலாறு.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஆர்டிமிஸ் 2 விண்வெளி வீரர்கள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Apr 2026 08:59 AM IST

ஏப்ரல் 11, 2026: பூமியிலிருந்து 4,06,778 கி.மீ. தூரம் வரை மனிதர்கள் சென்ற மிகத் தைரியமான விண்வெளிப் பயணமாக அமைந்த ஆர்டிமிஸ் 2 மிஷன், பூமியின் அடர்த்தியான வளிமண்டலத்தை கடந்து தீப்பற்றி எரியும் போல் தோன்றிய மீள் நுழைவு கட்டத்தை வெற்றிகரமாக முடித்து, கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பசிபிக் பெருங்கடலில் பராசூட்டுகள் திறக்கப்பட்ட தருணம், 21ஆம் நூற்றாண்டில் மனிதர்களின் முதல் நிலா பயணத்தை நிறைவு செய்த நான்கு விண்வெளி வீரர்களின் வெற்றிகரமான திரும்பிவருகையை குறித்தது. NASA தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சாதனை, குறைந்த பூமி சுற்றுப்பாதையைத் தாண்டி மனிதர்கள் நிலைத்திருக்கும் முயற்சியில் ஒரு பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்:

இந்த மிஷனில் கமாண்டர் ரீட் வைஸ்மேன், , பைலட் விக்டர் குளோவர்  மற்றும் மிஷன் ஸ்பெஷலிஸ்ட்கள்  கிறிஸ்டினா கோச், ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் Orion spacecraft மூலம் பயணம் செய்து, மிக அதிக வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்து, பின்னர் பராசூட்டுகள் திறந்து பாதுகாப்பாக கடலில் இறங்கினர்.

NASA மற்றும் கடற்படை மீட்பு குழுக்கள் விரைவாக செயல்பட்டு, விண்கலத்தை பாதுகாப்பாக நிலைநிறுத்தினர். 10 நாட்கள் நீண்ட நிலா சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த விண்வெளி வீரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

நிலா பயணத்தில் புதிய கட்டம்:

ஆர்டிமிஸ் 2 மிஷன், நவீன விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. Apollo program பிறகு, மனிதர்கள் மீண்டும் நிலா சுற்றுப்பாதையை அடைந்த முதல் மிஷன் இதுவாகும்.

முன்னதாக நடந்த ஆர்டிமிஸ் 2 மிஷன் மனிதர்கள் இல்லாமல் முக்கிய அமைப்புகளை சோதித்தது. ஆனால் ஆர்டிமிஸ் 2, மனிதர்களுடன் நிலாவைச் சுற்றி பயணம் செய்து, உயிர் ஆதரவு அமைப்புகள், வழிநடத்தல் திறன் மற்றும் ஆழ விண்வெளி செயல்பாடுகளை சோதனை செய்தது.

இந்த பயணத்தின் போது, விண்வெளி வீரர்கள் நிலா மேற்பரப்பின் அதிசயமான படங்களையும், பூமி உதயமாகும் காட்சிகளையும் பதிவு செய்தனர். இது பழைய நிலா பயணங்களின் நினைவுகளை மீட்டதோடு, புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தியது.

Also Read: நொடி பொழுதில் 17 ஏக்கர் நிலப்பரப்பு காலி ஆகிவிடும்.. மிகவும் அபாயகரமான கிளஸ்டர் பாம் ஏவுகணைகளை சோதனை செய்யும் வடகொரியா!

மிஷனின் மிக சவாலான கட்டமாக இருந்தது பூமிக்குள் மீள் நுழைவு. மணிக்கு 40,000 கி.மீ. வேகத்தை கடந்த நிலையில், விண்கலம் மிகுந்த வெப்பத்தை தாங்கி பாதுகாப்பாக கடலில் இறங்கியது. இது Orion விண்கலத்தின் வெப்பக் கவசத்தின் வலிமையையும் மீட்பு முறைகளின் திறனையும் நிரூபித்தது.

எதிர்கால விண்வெளி திட்டங்கள்:

நாசா அதிகாரிகள், இந்த மிஷனை நிலா ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு முக்கிய படியாக பாராட்டினர். குறிப்பாக, அடுத்ததாக நடைபெறவுள்ள ஆர்டிமிஸ் 3 மிஷன் மூலம் மனிதர்களை மீண்டும் நிலா மேற்பரப்பில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்டிமிஸ் 2 மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், எதிர்கால மிஷன்களுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும். குறிப்பாக, 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை மீண்டும் நிலாவில் நிறுத்தும் முயற்சிக்கு இது வழிகாட்டும். Artemis II வெற்றியுடன், மனித விண்வெளி பயணத்தில் புதிய யுகம் தொடங்கியுள்ளது. இது மனிதர்களை மீண்டும் நிலாவிற்கும், அதற்குப் பிறகு செவ்வாய் மற்றும் அதற்கு அப்பாலும் கொண்டு செல்லும் பாதையைத் திறக்கிறது.

Follow Us