Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Seeman

Seeman

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியலில் தனித்துவமான பாதையை உருவாக்கியவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரியில் 1966 ஆம் ஆண்டு பிறந்த அவர், திரைப்பட இயக்குநராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தாலும், தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 2000களின் தொடக்கத்தில் இலங்கை தமிழருக்கு ஆதரவாகவும், தமிழ் இன உணர்வுக்காகவும் வலியுறுத்திய அவர், 2010 ஆம் ஆண்டு “நாம் தமிழர் கட்சி”யை நிறுவினார். அவர் வகிக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழியாக, கட்சியின் முக்கியக் கொள்கைகளை வெளிப்படுத்தி வருகிறார். சீமான் தமிழ்நாட்டின் மரபு, மொழி, விவசாயம், நீர் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தீவிர அரசியல் பேச்சாளராக செயல்படுகிறார்.தமிழ்த் தேசியம் மற்றும் மக்கள் நல அரசியல் என்ற தளத்தில் அவரது பயணம் இன்று பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் கட்சி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் தனித்து களம் கண்டு வருகிறார். 2025 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. சீமான், நாம் தமிழர் கட்சி தொடர்பான செய்திகளை நாம் இங்கு காணலாம்.

Read More

“நாதகவுக்கு போட்டி யாரும் இல்லை”.. 16% வாக்கு பெறுவோம்.. சீமான் நம்பிக்கை..

No competition for the NTK: இந்த முறை மு.க.ஸ்டாலின். ஆட்சியில் மாற்றம் வந்துவிடுமா? ஒரே சித்தாந்தம் கொண்ட கட்சிகள் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன. ஆனால், என் சித்தாந்தத்திற்குப் போட்டியிட யாரும் இல்லை. என் போன்ற கருத்துக்கள் கொண்ட கட்சிகள் இல்லாததால், நான் தனியாகப் போட்டியிடுகிறேன் என்று அவர் கூறினார்.

“ஆண்களுக்கு இலவசப் பேருந்து யாராவது கேட்டார்களா?”.. அதிமுக வாக்குறுதிகளை சரமாரியாக விமர்சித்த சீமான்!!

Seeman criticize AIADMK: மக்கள் இலவசமாகப் பயணம் செய்வதற்குப் போதுமான நல்ல பேருந்துகள் இருக்கின்றனவா? இலவசப் பேருந்துப் பயணத்திற்கு என்ன மரியாதை கொடுக்கப்படுகிறது என்று யாராவது கேட்பதை நீங்கள் கேட்கவில்லையா? இது ஒரு நலத்திட்டமா? என நாதக சீமான் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

“தம்பி அண்ணாமலைக்கு கொள்கையை கடந்து துணை நிற்போம்”.. ஆதரவு கரம் நீட்டிய சீமான்!!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு தம்பி அண்ணாமலை என்ற தனியொருவரை மட்டும் அவமதிப்பதல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும்; அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்களை வழிநடத்தும் மதிப்புமிக்கத் தலைவர் பெருமக்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது சரியானதல்ல என்று சீமான் தெரிவித்துள்ளார்.

“தைப்பொங்கல் அல்ல, தேர்தல் பொங்கல்”.. ரூ.3,000 ரொக்கப்பரிசு குறித்து சீமான் விமர்சனம்!!

மக்களுக்கு தை பொங்கலாக இல்லாமல், தேர்தல் பொங்கலாக உள்ளது. அதோடு, பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.6,800 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசு ரூ.10 லட்சம் கோடி கடனில் உள்ளது. ரூ.4.5 லட்சம் கோடியில் நாட்டை உலகின் தலைசிறந்த தேசமாக என்னால் மாற்ற முடியும் என்றும் கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் திராவிடருக்கும்-தமிழருக்கும் இடையே போட்டி…சீமான்!

Ntk Chief Coordinator Seeman : தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழருக்கும், திராவிடர்களுக்கும் போட்டி நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும், திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார் .

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? விஜய்க்கு எந்த இடம்? வெளியானது புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள்

Opinion Poll Results: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் எனற கருத்து கணிப்பை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் குறித்தும், விஜய் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

ஆர்.எஸ்.எஸ் எண்ணங்களை சீமான் பிரதிபலிக்கிறார்…தொல்.திருமாவளவன் அட்டாக்!

Seeman Reflect The Thoughts Of RSS: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர் எஸ் எஸ்- இயக்கத்தின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். மேலும், தமிழ் தேசியம் குறித்து குறிப்பிட்டார்.

பெரியாரு மண்ணா? காலையிலே வெறி ஏத்தாதீங்க – சீமான் ஆவேசம்

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்படி அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான் திராவிடம் குறித்தும், தமிழர்கள் குறித்தும் பேசினார். மேலும் பெரியார் மண் என்பது குறித்த கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்தார்

விஜய் குறித்த கேள்வி…டென்ஷனான சீமான்…அடுத்து நடந்தது என்ன!

Seeman Tenses Over About Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திடீர் டென்ஷன் ஆனார். மேலும், அவரை கடுமையாக விமர்சனம் செய்தார் .

பாஜக வளர்வதற்கு கருணாநிதி தான் காரணம்…சீமான் ஆவேசம்!

Karunanidhi Is The Reason For BJP Growth: தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி வளர்வதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும், பாஜகவுக்கு திமுக சதித் திட்டம தீட்டி கொடுப்பதாக குற்றஞ்சாட்டினார்.

SIR-ஐ ஆதரிப்பதா? ‘அதிமுக வாக்குகளே காலியாக போகிறது’.. சீமான் பாய்ச்சல்!!

Seeman on SIR; எஸ்ஐஆர் நடைமுறையை இந்த அளவுக்கு அவசர கதியில் அமல்படுத்துவது, மக்களிடையே தேவையில்லாத குழப்பத்தையும், நம்பிக்கையின்மையையும் அதிகரிக்கிறது என பல்வேறு தரப்பிலும் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளன. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலை மாற்றுவது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டையே பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி செத்துடுச்சு – சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் பீகார் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பீகார் முடிவு தமிழ்நாட்டில் எதிரொலிக்காது என்றும் காங்கிரஸ் கட்சி காமராசர் இறந்தபோதே இந்த மண்ணில் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்

சரியான நேரத்திற்கு நெற்பயிர்களை ஏன் கொள்முதல் செய்யவில்லை? இது தான் திராவிட மாடலா? – சீமான் கேள்வி

Seeman Statement: நெல் கொள்முதல் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் உலகமே வியக்கும் நான்கரை ஆண்டு சாதனையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்

Seeman: 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி யாருடன்..? இயேசு மேல் ஆணை.. சீமான் கொடுத்த ட்விஸ்ட்!

Assembly elections 2026: தேமுதிக, பாமக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவை எந்த கட்சியுடன் எப்போது கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படியான சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்ட சீமான்.. வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்..

Supreme Court On Seeman Case: சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில், சீமான் மற்றும் விஜயலட்சுமி இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இரு தரப்பும் இனி இந்த விவகாரத்தில் எந்தவொரு வழக்கையும் மேல்முறையீடாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.