Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Seeman

Seeman

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியலில் தனித்துவமான பாதையை உருவாக்கியவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரியில் 1966 ஆம் ஆண்டு பிறந்த அவர், திரைப்பட இயக்குநராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தாலும், தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 2000களின் தொடக்கத்தில் இலங்கை தமிழருக்கு ஆதரவாகவும், தமிழ் இன உணர்வுக்காகவும் வலியுறுத்திய அவர், 2010 ஆம் ஆண்டு “நாம் தமிழர் கட்சி”யை நிறுவினார். அவர் வகிக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழியாக, கட்சியின் முக்கியக் கொள்கைகளை வெளிப்படுத்தி வருகிறார். சீமான் தமிழ்நாட்டின் மரபு, மொழி, விவசாயம், நீர் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தீவிர அரசியல் பேச்சாளராக செயல்படுகிறார்.தமிழ்த் தேசியம் மற்றும் மக்கள் நல அரசியல் என்ற தளத்தில் அவரது பயணம் இன்று பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் கட்சி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் தனித்து களம் கண்டு வருகிறார். 2025 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. சீமான், நாம் தமிழர் கட்சி தொடர்பான செய்திகளை நாம் இங்கு காணலாம்.

Read More

சரியான நேரத்திற்கு நெற்பயிர்களை ஏன் கொள்முதல் செய்யவில்லை? இது தான் திராவிட மாடலா? – சீமான் கேள்வி

Seeman Statement: நெல் கொள்முதல் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் உலகமே வியக்கும் நான்கரை ஆண்டு சாதனையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்

Seeman: 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி யாருடன்..? இயேசு மேல் ஆணை.. சீமான் கொடுத்த ட்விஸ்ட்!

Assembly elections 2026: தேமுதிக, பாமக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவை எந்த கட்சியுடன் எப்போது கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படியான சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்ட சீமான்.. வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்..

Supreme Court On Seeman Case: சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில், சீமான் மற்றும் விஜயலட்சுமி இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இரு தரப்பும் இனி இந்த விவகாரத்தில் எந்தவொரு வழக்கையும் மேல்முறையீடாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’விஜயின் இதயத்தில் வலியே இல்ல.. சினிமா வசனம் பேசுறாரு’ சீமான் பளீச்!

TVK Stampede : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அதாவது, விஜய் பேசியது திரைப்படம் வசனம் போன்று இருப்பதாகவும், விஜயின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனநோயாளியாக மாறிய சீமான்.. அண்ணா குறித்து அவதூறு பேச்சுக்கு சீமான் மீது குவியும் கண்டனங்கள்..

Political Leaders On Seeman: பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் மீது நாகரீகமற்ற முறையில் கடுமையாக பேசியுள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக மாணவர் அணி செயலாளர் சீமான் மனநோயாளியாக மாறியுள்ளார் என விமர்சித்துள்ளார்.

” அஜித், ரஜினி வந்தால் இதை விட கூட்டம் வரும்” – விஜயின் பிரச்சாரம் குறித்து சீமான் கருத்து..

Seeman: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இந்நிலையில், அஜித், ரஜினி வந்தால் இதைவிட அதிக கூட்டம் வரும் என சீமான் தெரிவித்துள்ளார்.

Seeman: வேடிக்கை காட்டும் சிங்கம்.. விஜயை கடுமையாக விமர்சித்த சீமான்!

TVK Vijay: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயின் தேர்தல் பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். உண்மையான மக்கள் சந்திப்பு என்பது நேரடி தொடர்புதான் என வலியுறுத்திய சீமான், விஜயின் ரோடு ஷோக்களை மக்கள் சந்திப்பாகக் கருதக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

’சீமான் சொன்னது தான் உண்மை’ விஜய் குறித்து பேசிய பிரேமலதா!

Premalatha On TVk Chief Vijay : விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாதபோது, விஜய் அவரை சந்திக்கவில்லை என சீமான் கூறியது உண்மை தான் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுபற்றி நானும் விஜயிடம் கேட்பேன் எனவும் பிரேமலதா தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் மாநாட்டில் விஜயகாந்த்தை அண்ணன் என குறிப்பிட்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

NTK Seeman: பொதுக்கூட்டத்தில் சலசலப்பு.. ஆவேசமாக அடிக்க பாய்ந்த சீமான்!

செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கியதில், கோட்டையை மராட்டியர்கள் கட்டியதாக குறிப்பிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது. சீமான் தலைமையிலான இந்த கூட்டத்தில், அவர் கோபப்பட்டு மேடையில் இருந்து இறங்கி வந்து வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Seeman Speech : வாக்குறுதிகளை மக்கள் மறக்க மாட்டாங்க – சீமான் பேச்சு

ராமச்சந்திர ஆதித்தனாரில் 91 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவ படத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் மரியாதை செய்தனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சீமானும் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய் சீமான், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அவர்கள் மறுத்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்

Seeman: தூய்மைப் பணியாளர்கள் 10 நாள் போராட்டம்.. தனியார்மயமாக்கல் அவசியம் ஏன்..? சீமான் கேள்வி!

Chennai Sanitation Workers' 10-Day Protest: சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கியதற்கு எதிராக நூற்றுக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்கள் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். துப்புரவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Seeman: பீகார் மக்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா..? நாம் தமிழர் கட்சி சீமான் ஆதங்கம்..!

Bihar Voters in Tamil Nadu: பீகாரில் இருந்து 36 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, 7 லட்சம் பேர் தமிழ்நாட்டில் வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மாடு மேய்த்து சீமான் போராட்டம்.. வனத்துறையினருடன் தள்ளுமுள்ளு.. தேனியில் பரபரப்பு!

Seeman Protest With Cattles : தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாடு மேய்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினரின் தடை மீறி நடந்த போராட்டத்தில் பிரச்னை ஏற்பட்டது. தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், வனத்துறையினர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவதில் என்ன சிக்கல்? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி..

Seeman Statement: தூத்துக்குடியில் சமீபத்தில் நடந்த ஆணவப்படுகொலைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் அதற்கென தனிச்சட்டம் அமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவதில் என்ன சிக்கல் என கேள்வி எழுப்பியுள்ளார்.

என்னிடம் அதிகாரம் இருந்தால்.. சாதி படுகொலைக்கு எதிரான சீமான் காட்டம்!

என்னிடம் அதிகாரம் இருந்தால்  ஒரு கொலை நடந்தாலே சம்பந்தப்பட்ட குற்றவாளியின் கல்வி சான்றிதழ், ஆவணங்கள் எதுவும் செல்லாது. அவன் தலைமுறையினருக்கே அரசு வேலை கிடையாது சட்டம் போட்டு நிறுத்தி விடுவேன். அப்படி என்றால் ஒருவனுக்கு அதை செய்ய நினைப்பு வருமா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.