AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ரமலான்

ரமலான்

இஸ்லாமிய நாட்காட்டியில், ஷாபான் மாதத்தைத் தொடர்ந்து ரமலான் ஷெரீஃப் மாதம் வருகிறது. ரமலான் இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படுகிறது மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த காலகட்டத்தில், முஸ்லிம்கள் நோன்பு இருந்து, நாள் முழுவதும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, புனித நூலான குர்ஆன் இந்த புனித மாதத்தில் அல்லாஹ்வால் வெளிப்படுத்தப்பட்டது, இது முஸ்லிம்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக அமைகிறது. ரமலானின் 30 நாட்களில், மக்கள் புனித உணவான செஹ்ரியை சாப்பிட்டு நோன்பு நோற்கிறார்கள், பின்னர் இப்தார் (தூபம் போடும்) மூலம் தங்கள் நோன்பை முடிக்கிறார்கள். ரமலானின் போது, ​​மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள், குர்ஆனை ஓதுகிறார்கள்.

Read More

திருச்சியில் ரமலான் கொண்டாட்டம் – 1000 பேருக்கு பிரியாணி

திருச்சியில் ரமலானை  முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்குவதற்காக பிரம்மாண்டமாக பிரியாணி தயாரிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள ஒரு பிரபல உணவக உரிமையாளர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து பிரியாணி சமைத்தனர். இந்த நிகழ்வில், நூற்றுக்கணக்கான கிலோ அரிசி மற்றும் இறைச்சி பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான் கொண்டாட்டம்.. திருச்சியில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சமைக்கப்பட்ட பிரியாணி!

தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான இந்த ரம்ஜான் பண்டிகை நாளில், வழக்கமாக இஸ்லாமியர்கள் பிரியாணி சமைத்து அக்கம் பக்கத்தினருக்கு வழங்குவது வழக்கம். அந்த வகையில், திருச்சியில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பிரியாணி தயாரிaக்கப்பட்டது. 

ரமலான் பண்டிகை… தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

Ramadan Festival: தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மசூதி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தொழுகையில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தியதுடன், ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொழுகை நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல முயன்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தம்.. பெரும் பரபரப்பு!

Thiruparankundram : ரம்ஜான் பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு தொழுகை நடத்த சென்ற இஸ்லாமியர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் விமர்சையாக கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை.. தலைவர்கள் வாழ்த்து..

புனித ரமலான் மாதத்தில் நாம் மேற்கொள்ளும் நோன்பும், நல் செயல்களும் அனைத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அங்கீகரிப்பான். இந்த இனிய நாளில் நம்மிடையே ஈகையும், சகோதரத்துவமும் தலைக்கட்டட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இதற்காக சிறப்பு தொழுகைகள் காலை முதலே நடைபெற்று வருகின்றன.

ஞாயிற்று கிழமை அட்டவணையில் சேவை.. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Southern Railway Ramzan Announcement | இந்தியா முழுவதும் நாளை (மார்ச் 21, 2026) இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், நாளை டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஞாயிற்று கிழமை அட்டவணையில் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் 21 அன்று ரமலான் கொண்டாட்டம் – தலைமை காஜி அறிவிப்பு

தமிழ்நாட்டில் மார்ச் 21, 2026 சனிக்கிழமை அன்று ரமலான் கொண்டாடப்படவுள்ளதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்த நிலையில் மார்ச் 19, 2026 அன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் அதாவது மார்ச் 21, 2026 அன்று ரமலான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித ரமலான்.. நோன்பு காலங்களில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்..

Ramadan fasting: நாம் செய்யும் சிறு தவறுகள் நோன்பை முறிக்காமல் இருக்கலாம், ஆனால் அவை நோன்பின் மூலம் நமக்குக் கிடைக்க வேண்டிய 'தக்வா' எனப்படும் இறை அச்சத்தையும் நற்பலன்களையும் குறைத்துவிடும். எனவே, இந்த ரமலானில் நாவையும், மனதையும், உறுப்புகளையும் தீயவற்றிலிருந்து காத்து முழுமையான பலனைப் பெற முயல்வோம்.

ரமலான் நோன்பு தொடக்கம்… பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

Ramadan Fasting Begins : தமிழகம் முழுவதும் நேற்று புதன்கிழமை பிறை தென்பட்டதாக அரசு தலைமை காஜி முஃப்தி என்பி உஸ்மான் முஹியித்தின் பாகவி மழஹிரி காஸிமி அறிவித்ததை அடுத்து, இன்று வியாழக்கிழமை முதல் இஸ்லாமியர்கள் நோன்பை தொடங்கி உள்ளனர் .

Ramadan 2026: முதல் நோன்பு எப்போது? நகர வாரியான விவரங்கள்

Ramadan 2026 Update : இந்தியாவில் ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு வருகிற 2026 பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் நகரம் வாரியாக முதல் நோன்பு எப்போது கடைபிடிக்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருப்பரங்குன்றம் தர்காவில் பக்ரீத்-ரமலான் பண்டிகையில் மட்டுமே தொழுகை நடத்த அனுமதி…உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!

Thiruparankundram Dargah: திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் இந்த இரு பண்டிகைகளின் போது மட்டுமே தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி படுத்தி உள்ளது. இதுதொடர்பான மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.