தவெக-வுடன் கூட்டணியா விஜய பிரபாகரன் சொன்ன முக்கிய தகவல்..!
DMDK Alliance Decision: கரூர் மாவட்டத்தில் பேசிய தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், தவெக-தேமுதிக கூட்டணி குறித்து 2026 ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தற்போது தேமுதிக வளர்ச்சியே முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் கூறினார். இந்தியா கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

தவெகவுடன் கூட்டணி குறித்து சொன்ன விஜய பிரபாகரன்
கரூர் ஜூன் 07: கரூர் மாவட்டத்தில் பேசிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், தமிழக வெற்றி கழகம் -தேமுதிக கூட்டணியைப் பற்றி 2026 ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தற்போதைக்கு தேமுதிக வளர்ச்சியே முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் கூறினார். கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு நன்றி தெரிவித்தார். கூட்டணிப் பங்காளிகள் தொடர்பான முடிவு பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்தார். 2026 தேர்தல் முன்னிட்டு அரசியல் சூழ்நிலை மாறக்கூடும் எனவும் பரவலாக பேசப்படுகிறது. தேர்தல் முன் இந்த மாநாடு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
தவெக – தேமுதிக கூட்டணி? – விஜய பிரபாகரன்
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேமுதிகவின் எதிர்கால கூட்டணி தொடர்பான அறிவிப்பு, 2025 ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் வெளியிடப்படும் என தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் ஆண்டிப்பட்டிக் கோட்டையில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்: “தேமுதிக வளர்ச்சி பாதையில் செல்லும் நிலையில் உள்ளது. கூட்டணியை நோக்கி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், தற்போதைய நிலைமை என்பது தேமுதிகவின் தனி வளர்ச்சிக்கு ஆதரவாகவே அமைகிறது.”
2026 ஜனவரி மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு
மேலும், “தவெக மற்றும் தேமுதிக இடையே கூட்டணி அமையுமா என்பது குறித்த முடிவை, 2026 ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநில மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார். அதே மாநாட்டில் எதிர்கால தேர்தல் திட்டங்கள் குறித்து தெளிவாகக் கூறப்படும்” என்றார்.
தகவலுக்கு ஏற்ப, 2026 சட்டப்பேரவை தேர்தலில் முக்கியமான அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக தற்போது தனித்து செயல்பட நினைத்தாலும், முந்தைய தேர்தல்களில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்த அனுபவம் பெற்றுள்ளது. எனவே, கூட்டணிக்கான சூழ்நிலை இன்னும் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது என்பது அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தேமுதிகவுக்கு இந்தியா கூட்டணியில் அழைப்பு
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விருப்பம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் இணையப்போகிறது என்பது குறித்து 2026 ஜனவரியில் அறிவிக்கப்படும் என பொதுச் செயலாளர் பிரேமலதா முன்பு கூறியிருந்தார்.
சமீபத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிகவுக்கு இடம் வழங்கப்படாததையடுத்து கட்சியின் சில நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், இந்தியா கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்திற்கு இடமளித்துள்ளது.