AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வரான பின் முதன்முறையாக கரூர் செல்லும் விஜய்.. கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திக்கத் திட்டம்!!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு துயர நாளாக அமைந்தது. அன்று நாமக்கல் மாவட்டத்தில் தனது 'மக்கள் சந்திப்பு பயணத்தை' வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, தவெக தலைவர் விஜய் கரூரை நோக்கித் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்தார்.

முதல்வரான பின் முதன்முறையாக கரூர் செல்லும் விஜய்.. கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திக்கத் திட்டம்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 29 Jun 2026 13:04 PM IST

சென்னை, ஜுன் 29: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், அடுத்த மாதம் (ஜூலை) இரண்டாவது வாரத்தில் கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ள தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் கரூர் மாவட்டத்திற்குச் செல்லும் முதல் அதிகாரப்பூர்வ அரசியல் பயணம் இது என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு துயர நாளாக அமைந்தது. அன்று நாமக்கல் மாவட்டத்தில் தனது ‘மக்கள் சந்திப்பு பயணத்தை’ வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, தவெக தலைவர் விஜய் கரூரை நோக்கித் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்தார்.

இதையும் படிக்க: அரசு வேலை மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது எஃப்.ஐ.ஆர்.. சம்மன் அனுப்பிய போலீசார்!!

சோகத்தில் முடிந்த ‘மக்கள் சந்திப்பு பயணம்’:

அவர் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு அருகே வந்தபோது, அவரைக் காண்பதற்கும் வரவேற்பதற்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டனர். அப்போது ஏற்பட்ட எதிர்பாராத கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி, துரதிர்ஷ்டவசமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோரச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாகப் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டு, தற்போது வரை தீவிர விசாரணை வளையத்தில் உள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாக்குறுதி:

இந்த துயரச் சம்பவத்தின் போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், “இந்த விபத்திற்கும் தலைவர் விஜய்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்று ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்து விஜய்க்கு ஆதரவாக நின்றனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற விஜய், “கண்டிப்பாக உங்களை உங்கள் இடத்திற்கே வந்து நேரடியாகச் சந்திப்பேன்” என்று உருக்கமாக வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே, தற்போது ஜூலை இரண்டாம் வாரத்தில் அவர் கரூர் சென்று, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், ஆலோசிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிக்க : மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்

கரூர் அரசியல் சூழலில் புதிய பரபரப்பு:

கரூரின் முக்கிய அதிமுக முகமும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்றுதான் தனது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அவர் சி.விஜயபாஸ்கருடன் இணைந்து ஜூலை முதல் வாரத்தில் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த வியூகங்கள் எழுந்துள்ளன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முன்னாள் அதிமுக கோட்டையான கரூருக்கு முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் இந்த பயணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிப்பதோடு மட்டுமல்லாமல், கரூரில் தவெக-வின் அரசியல் பலத்தை மேலும் அதிகரிக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us