Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு: இன்னும் 6 நாட்கள் தான் இருக்கு…

Farmer Registration: விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் பதிவு கோவையில் நடைபெற்று வருகிறது. ஆதார், செல்போன், நிலஉடைமை விவரங்கள் இணைத்து 2025 ஜூன் 30க்குள் கட்டணமின்றி பதிவு செய்யலாம். அரசுத் திட்ட பயன்கள் பெற இது அவசியம். இந்த பதிவு சேவைகள் வட்டார வேளாண்மை மையங்களில் மற்றும் பொது சேவை மையங்களில் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.

கோவை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு: இன்னும் 6 நாட்கள் தான் இருக்கு…
கோவை வேளாண்மை துறைImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 24 Jun 2025 08:37 AM

கோவை ஜூன் 24: கோவை மாவட்டத்தில் (Coimbatore) விவசாயிகளுக்கு (Farmers) தனி அடையாள எண் வழங்கும் பணி (Unique Identification Number assignment) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆதார் எண், செல்போன் எண், நிலஉடைமை விவரங்களை இணைத்து பதிவு செய்ய வேண்டும். ‘பார்மர்ஸ் ரெஜிஸ்டரி’ செயலியின் மூலம் இந்த எண்ணை பெற முடியும். இதுவரை 85,429 விவசாயிகளில் 39,026 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசின் நிதி, காப்பீடு திட்டங்களில் பயன்பட இந்த எண் அவசியம். 2025 ஜூன் 30க்குள் பதிவு செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த பதிவு சேவைகள் வட்டார வேளாண்மை மையங்களில் மற்றும் பொது சேவை மையங்களில் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. இதனை கோவை வேளாண்மை துறை அறிவித்துள்ளது.

கோவை வேளாண்மை துறை அறிவிப்பு

மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களை நேரத்தோடு பெறும் வகையில், விவசாயிகளுக்கான தேசிய அடையாள எண் பதிவு பணிகள் தற்போது கோவை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களில், கட்டணமின்றி நடைபெறுகின்றன.

முக்கிய தகவல்கள் இணைத்தல் அவசியம்

விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், செல்போன் எண், நிலஉடைமை விவரங்கள் ஆகியவை தவறாமல் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம், 2025-26ம் நிதியாண்டு முதல் ‘பிரதமர் கவுரவ நிதி திட்டம்’, ‘பயிர் காப்பீடு திட்டம்’ போன்ற திட்டங்களில் விவசாயிகள் நேரடியாக பயன்பெற முடியும்.

தனித்துவ அடையாள எண் பெறும் அவசியம்

மத்திய அரசு கொண்டு வந்த ‘பார்மர்ஸ் ரெஜிஸ்டரி’ செயலி வழியாக ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம், ஒரே அடையாள எண் மூலம் அரசின் அனைத்து உதவிகளும் ஒரே இடத்தில் சேர்க்கப்பட முடியும்.

பதிவு எண்ணில் பின்னடைவு

கோவை மாவட்டத்தில் மொத்தம் 85,429 விவசாயிகள் உள்ள நிலையில், 68,596 பேர் பிரதமரின் நிதித் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால், ‘பார்மர்ஸ் ரெஜிஸ்டரி’ அடையாள எண்ணுக்காக இதுவரை 39,026 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர் என்று இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.

பதிவு செய்ய கடைசி நாள் – ஜூன் 30

விவசாயிகள் தங்களது நிலம், பயிர் சாகுபடி, ஆதார், செல்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் அருகிலுள்ள வேளாண்மை மையங்களில் அல்லது பொது சேவை மையங்களில் 2025 ஜூன் 30க்குள் பதிவு செய்ய வேண்டும். எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மின்னணு தரவுகள் மூலம் திட்ட உதவிகள் நேரடி பயன்

வேளாண் அடுக்குத்திட்டம் வழியாக விவசாயிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் மின்னணு முறையில் சேகரிக்கப்படுகிறது. இது மூலமாக அரசு உதவிகளை எளிதாக, தாமதமின்றி பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.