AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அடுத்த டார்கெட் இதுதான்!” – பதவி ஏற்றதும் ராகுல், விஜய் பற்றி மாணிக்கம் தாகூர் சொன்ன ரகசியம்!

உள்ளாட்சித் தேர்தலிலும் தற்போதைய தவெக உடனான கூட்டணி மிகத் தெளிவாகத் தொடரும் என்று உறுதியளித்தார். தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போது அதற்கான முறையான நடவடிக்கைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் குறித்து தோழமைக் கட்சிகளுடன் இணக்கமாகப் பேசப்படும் என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள பெருமிதத்தோடும், உரிய பண்போடும் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டார்.

“அடுத்த டார்கெட் இதுதான்!” – பதவி ஏற்றதும் ராகுல், விஜய் பற்றி மாணிக்கம் தாகூர் சொன்ன ரகசியம்!
மாணிக்கம் தாகூர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 28 Jun 2026 07:15 AM IST

சென்னை, ஜுன் 28: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், கட்சியை மீண்டும் ஒரு மாபெரும் இயக்கமாக மாற்றுவதே தங்களின் முதன்மை இலக்கு என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் கூட்டணிக் கட்சி என்ற பொறுப்புணர்வுடன் மக்கள் பணியாற்றுவதோடு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் முழு வெற்றி பெற்று ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதே தங்களின் அடுத்த டார்கெட் என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : ராஜினாமா செய்ய மாட்டேன்! – மதிமுக எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு – என்ன நடந்தது?

வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட மாணிக்கம் தாகூர், இப்பொறுப்பு மிக மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார். பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்கள் வகித்த பெருமைமிக்க பதவி இது என்பதால், இதனை மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் கையாள வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக உணர்வதாக அவர் தெரிவித்தார்.

தமிழக அரசியல் வரலாற்றில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள ஒரு முக்கிய காலகட்டத்தில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழக முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி தற்போது அங்கம் வகிக்கிறது. இத்தகையதொரு கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் முதன்முறையாகப் பங்கேற்பதால், தோழமைக் கட்சிகளுடன் இணைந்து தமிழக மக்களுக்கு ஒரு மிகச்சிறந்த நல்லாட்சியை வழங்க முழுப் பொறுப்புடன் பாடுபடப் போவதாக அவர் உறுதி அளித்தார்.

அடுத்தகட்ட இலக்கு: 40-க்கு 40:

புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், தங்களின் தற்போதைய அரசியல் வியூகம் இரண்டு முக்கிய லட்சியங்களை மையமாகக் கொண்டது என்று திட்டவட்டமாக விவரித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் தற்போதைய கூட்டணி 40-க்கு 40 என்ற கணக்கில் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்கான களப்பணிகளை ஒருமித்த கருத்துடன் முன்னெடுப்பது.

அகில இந்திய அளவில் தேசத்தைக் காப்பதற்காகத் தீவிரமாகப் போராடி வரும் ராகுல் காந்தி அவர்களைப் பிரதமராக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை அடிமட்டம் முதல் தயார் படுத்துவது.

உள்ளாட்சித் தேர்தலும் தலைவர்களின் இணக்கமான உறவும்:

தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், இடைத்தேர்தல்கள் குறித்தும் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலிலும் தற்போதைய தவெக உடனான கூட்டணி மிகத் தெளிவாகத் தொடரும் என்று உறுதியளித்தார். தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போது அதற்கான முறையான நடவடிக்கைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் குறித்து தோழமைக் கட்சிகளுடன் இணக்கமாகப் பேசப்படும் என்று கூறினார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள பெருமிதத்தோடும், உரிய பண்போடும் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டார்.

“எங்கள் அன்புத் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் இடையே உள்ள நட்பு மற்றும் உறவு மிகவும் பலமாக இருக்கிறது. இந்த இரண்டு இளம் தலைவர்கள் மீதும் தமிழக மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையும், மாபெரும் ஆதரவும் வைத்துள்ளனர். அதன் விளைவாக வரவிருக்கும் தேர்தல்களில் தங்களுக்குப் பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.”

காங்கிரஸ்காரர்களுக்கு உரிய மரியாதை:

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகார்கள் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்கள் கோரப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “முதல் நாளே அனைத்து விவகாரங்களையும் பேசிவிட முடியாது; தேர்தல் நெருங்கும்போது அதுகுறித்து விரிவாகப் பேசுவோம்” என்று குறிப்பிட்டார். இது ஒரு புதிய துவக்கம் என்றும், இந்தத் துவக்கம் காங்கிரஸ் தொண்டர்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார்.. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அந்த இருவர் யார்? வில்சன் எம்பி ஆவேசம்!

தற்போது அமைச்சரவையில் உள்ள தங்களின் இரண்டு அமைச்சர்களின் துணையோடும், கட்சியின் அனைத்துத் தரப்பு மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களோடும் இணைந்து, காங்கிரஸை ஒரு பலமான இயக்கமாக மாற்றுவது மட்டுமே தனது லட்சியம் என்று அவர் தெளிவுபடுத்தினார். “காங்கிரஸ்காரர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து போராடினோம்; தற்போது அந்த உரிய மரியாதை கிடைத்திருக்கிறது. இந்த மரியாதையோடும், பொறுப்புணர்வோடும் மக்கள் பணி செய்வதில் காங்கிரஸ் கட்சி மிகுந்த கவனத்துடன் செயல்படும்” என்று கூறியுள்ளர்.

Follow Us