தவெக கொடிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை – என்.ஆனந்த்
Tamilaga Vettri Kazhagam :விஜய் தலைமையிலான தமிழகம் வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து இளங்கோவன் கேள்வி எழுப்பினார்

விஜய் (Vijay) தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) கட்சி கொடி தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஜூன் 4, 2025 அன்று விசாரணைக்கு வந்தள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து இளங்கோவன் கேள்வி எழுப்பினார். மேலும் தவெக கட்சி கொடியில் யானை சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பது போல உதயசூரியன் அண்ணா போன்ற படங்களை பிற கட்சி கொடிகளில் பயன்படுத்தினால் திமுக, அதிமுக கட்சிகள் அனுமதிக்குமா எனவும் கேள்வி எழுப்பினார்.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பதில்
இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் என்.ஆன்ந்த் இந்த வழக்கில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தவெக கொடிக்கும் பகுசன் சமாஜ் கட்சி கொடிக்கும் தொடர்பு இருப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. தவெகவின் கொள்கை, எதிர்கால திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்சியின் கொடி உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.




இதனையடுத்து தனது கட்சி சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் எந்த வடிவிலும் பயன்படுத்த முடியாது என்று இளங்கோவன் நீதிமன்றத்தில் வாதிட்டார். இதனையடுத்து இருவரது வாதத்தை கேட்ட நீதிமன்றம், ஜூலை 1, 2025 அன்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. மேலும் அன்றயை தினம் தமிழக வெற்றிக் கழகம் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் கட்ட கல்வி விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் விருது விழா ஜூன் 4, 2025 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் விருதுகள் வழங்கினார். மாணவர்கள் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். மேலும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் விழாவில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இதனையடுத்து மூன்றாம் கட்ட விருது வழங்கும் விழா வருகிற ஜூன் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
மாணவர்களுடன் கியூட்டாக உரையாடிய நடிகர் விஜய்யின் வீடியோ
. @actorvijay : Mudiyathu mudiyathu.. Apovae Vanthu nikka vendiyathu thana 😂❤️ #VijayHonorsStudents #WeHugVijayAnnapic.twitter.com/6f5zyWz4LO
— Arun Vijay (@AVinthehousee) June 4, 2025
ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு
நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசிப் படமாக உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து நடிகர் விஜய் முழு அரசியல்வாதியாக களமிறங்கியிருக்கிறார். இந்தப் படத்தின் நடிகர் விஜய்யின் கடைசி நாளை படக்குழு பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் விஜய் வேண்டாம் என மறுத்து விட்டாராம். இந்தப் படம் வருகிற 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். கே.வி.என் நிறுவனம் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.