Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜயை விமர்சிக்க தடை? அதிமுகவினருக்கு ஆர்டர் போட்ட இபிஎஸ்.. என்ன மேட்டர்?

Edappadi Palanisamy On Tvk Vijay : சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்த மாவட்ட செலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சி பொதுச் செயாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை பற்றி விமர்சிக்க வேண்டாம் என கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜயை விமர்சிக்க தடை? அதிமுகவினருக்கு ஆர்டர் போட்ட இபிஎஸ்.. என்ன மேட்டர்?
எடப்பாடி பழனிசாமி - விஜய்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 31 May 2025 08:10 AM

  சென்னை, மே 31 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை (tamizhaga vettri kazhagam Chief Vijay) பற்றி அதிமுகவினர் விமர்சிக்க கூடாது என்று கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi palanisamy) கட்டளையிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், திராவிட முன்னேற்ற கழகம் பற்றிய விமர்னங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா திராவட முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2025 மே 31ஆம் தேதியான நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாட்களாக மாவட்ட செலயாளர்கள் கூட்டம் நடந்தது.

அதிமுகவினருக்கு ஆர்டர் போட்ட இபிஎஸ்

2025 மே 30ஆம் தேதியான நேற்று நடந்த கூட்டத்தில் 41 மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டாக தெரிகிறது. இதன்படி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. குறிப்பாக, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், மாவட்ட நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ” 2026 சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் மெகா கூட்டணி அமையும். அனைவரும் நம்பிக்கையோடு செயல்படுங்கள். முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மீதான விமர்சனங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்.

என்ன மேட்டர்?


அவர்களின் குறைகளை மக்களிடம் சொல்லுஙகள். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. அடுத்த ஓராண்டுக்கு கட்சி நிர்வாகிகள் சுற்றுலா செல்வதை தவிர்த்துவிட்டு, கட்சி பணியில் தீவிரம் காட்டுங்கள்” என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயை தங்கள் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

ஆனால், முதல்வர் வேட்பாளரை எடப்பாடியோ, விஜயோ விட்டுக் கொடுக்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால், முதல்வர் வேட்பாளர்  தான் என்ற முடிவில் விஜய் இருந்தால்  இந்த கூட்டணி இருக்காது என்று அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும், விஜய் என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கூட, அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ” அன்பு சசோதரர் விஜயும் திமுகவை அகற்றும் நிலைப்பாட்டில் உள்ளார். அவர் ஒன்றிணைய வேண்டும்” என கூறியிருந்தார். இதன் மூலம் அவர் விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்ததாக பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஹிட் அடித்த மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
சூப்பர் ஹிட் அடித்த மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?...
குறைந்தபட்ச இருப்புத் தொகை விதி நீக்கம் - கனரா வங்கி
குறைந்தபட்ச இருப்புத் தொகை விதி நீக்கம் - கனரா வங்கி...
அகமதாபாத்தில் வெற்றிக்காக போராடும் MI.. இன்று PBKS-ஐ வீழ்த்துமா?
அகமதாபாத்தில் வெற்றிக்காக போராடும் MI.. இன்று PBKS-ஐ வீழ்த்துமா?...
எண்ணூர் பேருந்து நிலையம்: நிழற்குடை இல்லை, கழிப்பறை இல்லை..!
எண்ணூர் பேருந்து நிலையம்: நிழற்குடை இல்லை, கழிப்பறை இல்லை..!...
சிறுவனுடன் கால்பந்து விளையாடும் காகம் - வைரல் வீடியோ!
சிறுவனுடன் கால்பந்து விளையாடும் காகம் - வைரல் வீடியோ!...
திடீர் வெயில்.. திடீர் மழை.. உடல்நிலையை பாதிக்கும் சில நோய்கள்!
திடீர் வெயில்.. திடீர் மழை.. உடல்நிலையை பாதிக்கும் சில நோய்கள்!...
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் செய்த செயல் - யோகி பாபு பேச்சு
ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் செய்த செயல் - யோகி பாபு பேச்சு...
தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு.. எத்தனை நாள் தெரியுமா?
தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு.. எத்தனை நாள் தெரியுமா?...
சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!
சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!...
செல்போன் தர மறுத்ததால் கொடூரம்: பெரியப்பாவால் கொல்லப்பட்ட மகன்..!
செல்போன் தர மறுத்ததால் கொடூரம்: பெரியப்பாவால் கொல்லப்பட்ட மகன்..!...
வடகிழக்கு மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை.. 30 பேர் பலி
வடகிழக்கு மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை.. 30 பேர் பலி...