AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம்!

Velliangiri Hills Heavy Rain Alert: கனமழை எச்சரிக்கையால் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 13-5-2026 இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை. தடையை மீறுவோருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம்!
வெள்ளியங்கிரி மலை Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 13 May 2026 12:32 PM IST

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு இன்று முதல் (13-5-2026) தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகள் வழுக்கலாக மாறியுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மலையேற முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலை அடிவாரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பரவலான மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக கோவை மற்றும் அதனை ஒட்டிய மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு, வழுக்கல் மற்றும் நீரோட்டம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு தற்காலிக தடை

பக்தர்கள் அதிகம் சென்று வரும் வெள்ளியங்கிரி மலையில் பாதுகாப்பு காரணங்களால் 13-5-2026 இன்று முதல் தற்காலிகமாக மலையேற்றம் தடை செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை காரணமாக மலைப்பாதைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் மலைப்பாதையில் செல்வது ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதால், யாரும் மலையேற முயற்சிக்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தடையை மீறினால் கடும் நடவடிக்கை

அரசு அறிவித்துள்ள இந்த தற்காலிக தடையை மீறி யாரேனும் மலையேற முயன்றால், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. பாதுகாப்பு பணியில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை அடிவார பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்

மழை நிலைமை சீராகும் வரை பொதுமக்களும் பக்தர்களும் நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பக்தர்களின் உயிர் பாதுகாப்பே முதன்மை என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சூழ்நிலை சீராகிய பிறகு மீண்டும் மலையேற்ற அனுமதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us