Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Caste Census: கண்துடைப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கக் கூடாது.. சமூக நீதிக்கான முழக்கம்! தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியீடு

Tamilaga Vettri Kazhagam Vijay: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சமூக நீதியை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து, அனைத்து சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Caste Census: கண்துடைப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கக் கூடாது.. சமூக நீதிக்கான முழக்கம்! தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியீடு
தவெக தலைவர் விஜய் - சாதிவாரி கணக்கெடுப்புImage Source: PTI and Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 17 Jun 2025 18:02 PM

சென்னை, ஜூன் 17: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் (Census) சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இருக்க வேண்டும் என, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் (TVK Vijay) இன்று அதாவது 2025 ஜூன் 17ம் தேதி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்புக்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் சமூக நிலை குறித்த சாதிவாரி கணக்கெடுப்பு (Caste Census) ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தான் வெளியிட்ட அறிக்கையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து தெரிவித்த முக்கிய விஷயங்களை விவரமாக பார்ப்போம்.

தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியீடு:

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் முக்கிய கருத்துகள்..

  • சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கணக்கெடுப்பு, 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் சமூக நீதிக்கான எங்களுடைய முழுமுதல் கோரிக்கையாக இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதை மத்திய அரசு பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது.
  • சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் மத்திய அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண்துடைப்பு சாதிவாரித் தலைக்கட்டுக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது. அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில் நடத்த வேண்டும். இதற்கென்று அனைத்துச் சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும்.
  • மக்களவைத் தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது. மாறாக அனைத்துச் சமூகத்திற்கும் உரிய விகிதாசார அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும். இதுவே முழு அளவிலான சமூக நீதி ஆகும். இந்தக் கணக்கெடுப்பின் வாயிலாக உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
  • புதிய சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வில் மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்தத் தரவுகள் முழுமையாகச் சேகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன. இதுதான் உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்றும் அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள அரசு செய்ய வேண்டியது இதைத்தான்.

தவெக வெளியிட்ட அறிக்கை விவரம்:

  • தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் கேட்டுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் வகுப்புகளின் சமூக, வாழ்வாதார. பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும், எந்தெந்த நிலைகளில் தற்போது பின்தங்கி உள்ளனர் என்பதற்கான சரியான தரவுகள் மற்றும் தற்போதைய சமூக நிலை உள்ளிட்டவற்றின் விவரங்களை அதில் சேகரிக்க வேண்டும். அந்த ஆய்வானது. அனைத்துச் சமூகத்திற்குமான பிரதிநிதித்துவத்தையும் சட்டப்படி செல்லத்தக்க, உகந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான தரவுகளை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
  • மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு, பா.ஜ.க.வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது.
  • அவ்வாறு ஒளிந்துகொண்டு மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் விட்டுவிட்டால், தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுக்கான கோரிக்கை இன்னும் வலுவடையும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
  • எங்கள் கொள்கைத் தலைவர் பெரியார் அவர்களின் கொள்கை முழக்கமான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை, கபட நாடகத் திமுக அரசு, பிளவுவாத பாஜக அரசுடன் இணைந்து அமல்படுத்தத் தவறினால், இந்த மக்கள் விரோத அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

 

இன்ஸ்டாகிராமில் புதிய ரீபோஸ்ட் வசதி - எப்படி செயல்படும்?
இன்ஸ்டாகிராமில் புதிய ரீபோஸ்ட் வசதி - எப்படி செயல்படும்?...
காப்பி சர்ச்சையில் சிக்கிய நடிகர் மோகன்லாலின் துடரும் படம்...
காப்பி சர்ச்சையில் சிக்கிய நடிகர் மோகன்லாலின் துடரும் படம்......
சச்சின் கொடுத்த 200 நம்பிக்கை - நீயா நானா கோபிநாத் பேச்சு!
சச்சின் கொடுத்த 200 நம்பிக்கை - நீயா நானா கோபிநாத் பேச்சு!...
சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?...
நான் சொன்ன காரணத்திற்காக படம் பார்க்க வராதீர்கள்- சித்தார்த்
நான் சொன்ன காரணத்திற்காக படம் பார்க்க வராதீர்கள்- சித்தார்த்...
20 ஆண்டுகளை நிறைவு செய்தது நடிகர் விக்ரமின் அந்நியன் படம்!
20 ஆண்டுகளை நிறைவு செய்தது நடிகர் விக்ரமின் அந்நியன் படம்!...
யூடியூப், இன்ஸ்டாகிராம் போல இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரம்
யூடியூப், இன்ஸ்டாகிராம் போல இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரம்...
கர்நாடகாவில் வெளுக்கும் மழை.. நிலச்சரிவு பாதிப்பு!
கர்நாடகாவில் வெளுக்கும் மழை.. நிலச்சரிவு பாதிப்பு!...
கேப்டன் பதவியை ஏன் வேண்டாம் என்றேன்..? மௌனம் கலைத்த பும்ரா!
கேப்டன் பதவியை ஏன் வேண்டாம் என்றேன்..? மௌனம் கலைத்த பும்ரா!...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்.. 3D வீடியோ பாரு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்.. 3D வீடியோ பாரு...
ஜெயிலர் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்.. ரசிகர்கள் உற்சாகம்!
ஜெயிலர் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்.. ரசிகர்கள் உற்சாகம்!...