செய்தித்தாள்களில் உணவுப்பொருட்கள் பேக் செய்யக் கூடாது: முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Tamil Nadu Food Safety Ban: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, சென்னையிலுள்ள டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் பழைய செய்தித்தாள்களில் உணவு பொட்டலம் செய்வதைத் தடை செய்துள்ளது. இது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெறிமுறைகளை மீறுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

தமிழ்நாடு ஜூன் 04: சென்னையில் டீக்கடைகள், உணவகங்களில் பழைய செய்தித்தாள்களில் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவுகள் பொட்டலம் செய்யத் தடை உணவு பாதுகாப்புத் துறை (Food Safety and Drug Administration Department) விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வணிகர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. அச்சிட்ட காகிதங்களில் இருந்து வேதிப்பொருட்கள் கலக்கும் வாய்ப்பு இருப்பதால், உடல் நலத்துக்கு ஆபத்தாக இருக்கலாம். 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. செயற்கை நிறமிகள், மீள்பயன்படும் எண்ணெய் உள்ளிட்டவை கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவக ஊழியர்களுக்கு தடுப்பூசி, மருத்துவ சான்றிதழ் கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பழைய செய்தித்தாள்களில் உணவு பொட்டலமிட தடை
உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் பழைய செய்தித்தாள்களில் பஜ்ஜி, போண்டா போன்ற சுடு உணவுப் பொருட்களை பொட்டலமாக தருவதை கடுமையாகத் தடை செய்துள்ளது தமிழக உணவு பாதுகாப்புத் துறை. இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை நகரின் பல பகுதிகளில், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் சுவர்களில் எச்சரிக்கை விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.




முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
உணவு வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பின்வரும் வழிமுறைகளை தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
Tamilnadu Food safety department Published The following Instructions to follow to the Food business Operators#fssaiawareness #fsw #fssaiindia #TNDIPR #who #tnfoodsafety pic.twitter.com/cjyanGZd4H
— Tamil Nadu Food Safety (@tnfoodsafety) June 4, 2025
உணவு பாதுகாப்புத் துறை கடும் எச்சரிக்கை
தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்புத் துறை (Food Safety and Drug Administration Department) உணவு மற்றும் மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ பயன்பாட்டை கண்காணிக்கும் முக்கியமான அரசு அமைப்பாகும். இந்த துறை உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் இறக்குமதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பழைய செய்தித்தாள்களில் எண்ணெய் பிழிந்த உணவுகள் விஷத்துடன் சமமானது என எச்சரிக்கும் துறை, அவை உலோக அசுத்தங்கள், தாலேட் (thalates), கனிம எண்ணெய்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலப்பதற்கேற்ப, அஜீரணம், மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்ற உடல் கோளாறுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
உணவகங்களில் பின்பற்ற வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:
உணவுப் பொருட்களை நியூஸ்பேப்பரில் பேக் செய்யவே கூடாது.
உணவுகளை கையாள்பவர்கள் கட்டாயம் கையுறை, தலைமுடி கவசம் அணிய வேண்டும்.
செயற்கை நிறமிகள் பஜ்ஜி, சிக்கன், கோபி மஞ்சூரியன் போன்றவற்றில் சேர்க்கவே கூடாது.
உணவகங்களில் பரிமாற வாழை இலை, பார்ச்மெண்ட் பேப்பர் அல்லது அலுமினியம் ஃபாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
FSSAI உரிமையுடன் உணவுப் பொருட்கள் கொள்முதல்/விற்பனை செய்யவேண்டும்; முழுமையான லேபிள் விவரங்கள் காணப்பட வேண்டும்.
தண்ணீர் மற்றும் நிபந்தனைகள் மருத்துவ சான்றிதழுடன் வைத்திருக்கப்பட வேண்டும்.
இந்த நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், உரிமம் ரத்து செய்யப்படும் வாய்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.