Tamil Nadu News Live: கிடைத்தது அனுமதி.. தவெக மாநாடு வேலைகள் தீவிரம்
Tamil Nadu Breaking News Today 12 August 2025, Live Updates: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான வேலைகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது போலிஸ் தரப்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது

LIVE NEWS & UPDATES
-
சென்னையில் ஏசி மின்சார பேருந்து சேவை.. எங்கெங்கு தெரியுமா?
சென்னையில் முதல்முறையாக ஏசி மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – திருவான்மியூர், கிளாம்பாக்கம் – சோழிங்கநல்லூர், தி.நகர் – திருப்போரூர், சென்னை விமான நிலையம் – சிறுசேரி,கோயம்பேடு பேருந்து நிலையம் – கேளம்பாக்கம் உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.71 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கு நேற்றிரவு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.71 கிலோ ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா சுங்கத்துறை அதிகாரியால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதே விமானத்தில் 19 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்த இருவரும் சிக்கினர்.
-
செங்கள் சூளையில் வேலை பார்த்து இளைஞர் கொலை.. சிறுமி கைது!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே செங்கள் சூளையில் வேலை பார்த்து வந்த 23 வயது இளைஞரை, அங்கு வேலைப் பார்த்து வந்த 16 வயது வடமாநில சிறுமி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க
-
ஆணவ கொலைக்கு தனிச்சட்டம்.. டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
2011 ஆம் ஆண்டு முதல் ஆணவ கொலைக்கு தனிச்சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். அப்போது இதுபற்றி பேசிய போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்போம் எனவும் கூறியுள்ளார்.
-
தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. சென்னை மாநகராட்சி கோரிக்கை!
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் தூய்மை பணியாளர்கள் பணி பாதுகாப்பு, பணப்பலன்கள் ஆகியவை உறுதி செய்யப்படும் எனவும், போராட்டத்தை கைவிடுமாறும் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
-
பாஸ் அடிப்படையில் அனுமதி
தவெக மாநாட்டில் குழந்தைகள் ,கர்ப்பிணிகள், வயதானவர்களுக்கு அனுமதி கிடையாது. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள் பாஸ் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
-
TVK Meeting : 42 கேள்விகள் – எழுத்துப்பூர்வமாக பதில்
காவல்துறை தரப்பில் 42 கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்காக தவெக சார்பில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் மாநாடு நடைபெறவுள்ளது
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு வேலைகள் தீவிரம்
ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.
-
கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
சிறுவனை தாக்கி கொன்ற சிறுத்தையை கூண்டு அமைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளன. இதற்கிடையே கேமரா பொருத்தியும், ட்ரோன் உதவியுடனும் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறை ஆராய்ந்து வருகிறது
-
Covai Crime News: சிறுத்தை தாக்கி சிறுவன் பலி
கோவை மாவட்டம் வால்பாறையில் 8 வயது சிறுவன் சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். வட மாநில தம்பதியின் மகனான நூர்சல் ஹக் சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
-
10 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம்
10 நாட்களுக்கு மேலாக பெருநகர சென்னை மாநகராட்டியின் தலைமையகமான ரிப்பன் கட்டிடத்தின் முன் போராட்டம் நடைபெறுகிறது. ராயப்புரம் மற்றும் திருவிக மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கும் நகராட்சியின் முடிவை ரத்து செய்யக் கோரிஇந்த போராட்டம் நடக்கிறது
-
துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம் – இன்று விசாரணை
சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கியதற்கு எதிராக துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது
-
ஆழ்வார்பேட்டை சர்வீஸ் ரோடு விவரம்
TTK சாலை (Outgoing)-ல் ஆழ்வார்பேட்டை நோக்கி மாநகர பேருந்துகள் கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திற்கு பதிலாக சர்வீஸ் சாலையை பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம்
-
ஆழ்வார்பேட்டை ரூட் விவரம் இதோ
இலகுரக வாகனங்கள் மட்டும் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. TTK சாலை (Incoming)-ல் மியூசிக் அகாடமி நோக்கி வரும் MTC பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையை பயன்படுத்தி ஆழ்வார்பேட்டை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முர்ரேஸ் கேட் சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி சேஷாத்ரி சாலை மற்றும் கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
-
சென்னையில் ரூட் மாற்றம்.. விவரம் இதோ
சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிச்சாலை ஆக மாற்றப்பட்டு, கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
-
ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்
அதன்படி, 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் . ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
Special Bus Updates : தொடர் விடுமுறையால் சிறப்பு பேருந்துகள்
சுதந்திர தினத்தை ஒட்டிய தொடர் விடுமுறையை என்பதால், தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயணம் செய்ய ஏதுவாக இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது
-
கடற்பகுதி காற்று.. மீனவர்களுக்கான எச்சரிக்கை!
ஆகஸ்ட் 15ம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், வங்கக் கடல் பகுதிகள், அரபிக் கடல்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மி வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
-
Chennai Rains : சென்னை வானிலை நிலவரம்.. மழை உண்டா?
ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்தடுன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை எங்கெல்லாம் மழை?
ஆகஸ்ட் 13ஆம் தேதியான நாளை வட மாவட்டங்களான திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கேரள எல்லை மாவட்டமான நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Tamil Nadu Weather Today : 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ஆகஸ்ட் 12ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Breaking News in Tamil Today 12 August 2025, Live Updates: வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 12, 2025 அன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஜூடோ பயற்சியாளர் கெபராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். அவரது தண்டனை விவரங்கள் ஆகஸ்ட் 12, 2025 அன்று நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது. சென்னையில் திடக்கழிவு மேலாண்மையை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் முடிவுக்கு எதிராக தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 12வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுகுறித்த அப்டேட்டை இந்தப் பக்கத்தில் பார்க்கலாம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 12, 2025 அன்று மின் தடை ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களை இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம். மேலும் பல அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்
மேலும் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க
Published On - Aug 12,2025 6:58 AM