தமிழகத்தில் முக்கிய கோயில்களில் திருடப்பட்ட 3 சுவாமி சிலைகள்… திருப்பி தர அமெரிக்கா சம்மதம்.
Smithsonian National Museum: தமிழகத்தில் 3 முக்கிய கோயில்களில் இருந்து திருடப்பட்ட 3 சுவாமி சிலைகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பதற்கு அமெரிக்காவில் உள்ள ஸ்மித்தோனியா தேசிய ஆசிய கலை அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாட்டு தூதரகமும் கையெழுத்திட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஸ்மித்தோனியா தேசிய ஆசிய கலை அருங்காட்சியகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 சுவாமி சிலைகள் இருந்தது தெரியவந்தது. தற்போது, அந்தச் சிலைகளை இந்தியாவுக்கு திரும்பத் தருவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, 9- ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவ நடராஜர் வெண்கல சிலை 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் மற்றும் உமாவின் சிற்பம், 16- ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தரர் மற்றும் பறவையின் ஓவியம் ஆகியவற்றை இந்தியாவுக்கு திரும்பி கொடுத்தற்காக தேசிய ஆசிய கலை அருங்காட்சியகத்தின் இயக்குனர் சேஸ் ராபின்ஸ்னுடன், அமெரிக்காவிற்கான இந்திய துணை தூதர் நம்யா கம்பா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். தேசிய கலை அருங்காட்சியகத்தில் இருந்து 3 விலை மதிப்பற்ற சிலைகள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த 3 சிலைகள்
இதில், தொல்பொருள்களின் தோற்றம் குறித்து ஆய்வை தொடர்ந்து இந்த சிலைகள் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்டதை அருங்காட்சியகம் கண்டறிந்தது. சிவ நடராஜர் வெண்கல சிலை பொதுமக்களுக்கு பார்வைக்காக வைக்கப்படும் என்றும் இது பார்வையாளர்களுக்கு இந்தியாவின் வளமான கலை மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை ஒரு பார்வையாக வழங்கும் என்று தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமஸ்கந்தன் என்று குறிப்பிடப்படும் சிவன் மற்றும் உமா மற்றும் பார்வியுடன் கூடிய சுந்தரர் ஆகிய சிற்பங்கள் கடந்த 1987- ஆம் ஆண்டில் ஆறுதல் எம். சாக்குலர் அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் விபத்து.. கொலம்பியாவில் அதிர்ச்சி




கள்ளக்குறிச்சி-மன்னார்குடி கோயில்களில் இருந்து…
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தின் புகைப்பட காப்பகத்தில் அருங்காட்சியக குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பார்வியுடன் கூடிய சுந்தரர் சிற்பம் 1956- ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்தது. சோமஸ்கந்தன் என்று குறிப்பிடப்படும் 12- ஆம் நூற்றாண்டின் வெண்கல சிவன் மற்றும் உமா சிலை 1959- ஆம் ஆண்டில் தமிழகத்தின் மன்னார்குடி வட்டம், ஆலத்தூர் கிராமத்தில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் புகைப்படம் எடுக்கப்பட்டதாகும்.
தஞ்சாவூர் கோயிலில் இருந்து…
சிவ நடராஜர் சிற்பம் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஸ்ரீ பாவ டேஸ்வரர் கோவிலை சேர்ந்ததாகும். இந்த வெண்கல சிற்பம் 2002- ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள டோரிஸ் வீனஸ் கேலரியிலிருந்து ஆசிய தேசிய கலை அருங்காட்சியகம் மூலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மற்றும் அமெரிக்க தூதரகம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் படிக்க: ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து.. 23 பேர் பலி.. வங்கதேசத்தில் பதறவைக்கும் சம்பவம்!