AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாநகராட்சிகளில் தூய்மைப் பணி தனியார்மயம்.. டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

அரசின் இந்த தனியார்மயமாக்கல் முயற்சிக்குத் தொடக்கம் முதலே தூய்மைப் பணியாளர் சங்கங்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. மாநகராட்சி மூலம் நேரடியாகச் சம்பளம் பெற்று வரும் தங்களுக்கு, தனியார்மயமாக்கலால் வேலைப் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் முற்றிலும் கேள்விக்குறியாகும் என்று கூறி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தது.

மாநகராட்சிகளில் தூய்மைப் பணி தனியார்மயம்.. டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
மாதிரிப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Jun 2026 13:40 PM IST

சென்னை, ஜுன் 26: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்குவது தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த டெண்டரைத் தமிழ்நாடு அரசு தற்போது முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பணிந்து அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர்த்த மற்ற முக்கிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வது குறித்து அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி, வீடுகளில் குப்பை சேகரிப்பது முதல் அவற்றை குப்பை கிடங்குகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணிகள் வரை அனைத்தையும் தனியாருக்குத் தாராளமயமாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்காகக் கடந்த இருபதாம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வ டெண்டர் கோரப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: ‘Start Run, Stop Drugs’ ஓட்டம்.. மக்களுடன் இணைந்து மாரத்தானில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்..

தனியார்மயம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த 12 மாநகராட்சிகள்:

அதன்படி, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தாம்பரம், ஆவடி, ஓசூர் மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட பன்னிரண்டு மாநகராட்சிகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்த விரிவான அறிக்கை கோரப்பட்டது. ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனங்கள் மூலமாகவே வழங்கப்பட்டு வரும் நிலையில், அதே போன்றதொரு நடைமுறையை இங்கும் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது.

“தேர்தலுக்கு முன் ஒரு பேச்சா? பின் ஒரு பேச்சா?”

அரசின் இந்த தனியார்மயமாக்கல் முயற்சிக்குத் தொடக்கம் முதலே தூய்மைப் பணியாளர் சங்கங்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. மாநகராட்சி மூலம் நேரடியாகச் சம்பளம் பெற்று வரும் தங்களுக்கு, தனியார்மயமாக்கலால் வேலைப் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் முற்றிலும் கேள்விக்குறியாகும் என்று கூறி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாநகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரப் போராட்டங்களில் இறங்கினர்.

முக்கியமாக, தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்குத் தற்போதைய ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளே மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தன. “தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பின் வேறு ஒரு நடவடிக்கையா?” என்று கூட்டணி கட்சிகளே அரசைப் பகிரங்கமாக விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்ப்புகளுக்குப் பணிந்து டெண்டர் ரத்து:

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையையும், நாளுக்கு நாள் தீவிரமடைந்த போராட்டங்களையும், கூட்டணி கட்சிகளின் அரசியல் அழுத்தங்களையும் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தனது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. கடந்த இருபதாம் தேதி சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்குக் கோரப்பட்டிருந்த அந்த டெண்டரை முழுமையாக ரத்து செய்து அரசாணை மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க: சட்டப்பேரவையில் குட்டி கதை சொல்லி விமர்சித்த முதல்வர் விஜய்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த ரியாக்ஷன்!!

அரசின் இந்த அதிரடி பின்வாங்கலானது தங்களின் ஒற்றுமைக்கும் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பணியாளர் சங்கத்தினர் தங்களது மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us