AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சட்டப்பேரவையில் குட்டி கதை சொல்லி விமர்சித்த முதல்வர் விஜய்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த ரியாக்ஷன்!!

இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருவதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார். "சாலைகளைக் கட்டுங்கள், துறைமுகங்களை அதிகரியுங்கள், விமான நிலையங்களை அமையுங்கள் மற்றும் பெரிய பெரிய மருத்துவமனைகளை உருவாக்குங்கள்; அப்போதுதான் மக்கள் வருவார்கள், பொருளாதாரச் சொத்துக்கள் பெருகும்" என்ற நோக்கில் மத்திய அரசு மூலதனச் செலவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டப்பேரவையில் குட்டி கதை சொல்லி விமர்சித்த முதல்வர் விஜய்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த ரியாக்ஷன்!!
முதல்வர் விஜய், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Jun 2026 06:46 AM IST

சென்னை, ஜுன் 26: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில், அரசியல் ரீதியான விவாதங்களும், மாநில அரசின் நிதி மேலாண்மை குறித்த பொருளாதாரக் கருத்துகளும் தற்போதைய முக்கியச் செய்தியாக உருவெடுத்துள்ளன. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்வைத்த விமர்சனங்கள் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பொதுமக்களுக்கான சொத்து உருவாக்கம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள விளக்கம் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க: அமோனியா வாயு கசிவு உயிரிழப்பு சம்பவம்.. 3 பேர் குழு அதிரடி விசாரணை.. முதல்வரிடம் விரிவான அறிக்கை தாக்கல்!

சட்டமன்றத்தில் குட்டிக்கதை விமர்சனம்:

நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சரைக் குறிவைத்து ஒரு குட்டிக்கதையின் மூலமாக முழுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்தார். “அஞ்சு நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூரே இந்த ஆட்டம் ஆயிடுச்சு” என்ற அரசியல் ரீதியான கருத்துக்களும், அது குறித்த விவாதங்களும் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் எதிரொலித்து வருகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அரசியல் விமர்சனங்களை சட்டசபையில் பண்ணாமல் வேறு எங்கு பண்ண முடியும்? இதற்கு எதிர்க்கட்சியினரும் தாராளமாகப் பதில் சொல்லட்டும், ஆளுங்கட்சியினரும் பேசட்டும்; இதில் எந்தத் தவறும் இல்லை” என்று ஜனநாயக ரீதியான விவாதங்களின் முக்கியத்துவம் குறித்துக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார்.

கடன் வாங்குவதன் உண்மையான தத்துவம் என்ன?

மாநில அரசுகள் வாங்கும் கடன்கள் குறித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடன் வாங்குவது தவறல்ல, ஆனால் அந்தப் பணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம் என்ற பொருளாதாரத் தியரியை விரிவாக விளக்கினார். ஒரு அரசு கடன் வாங்குகிறது என்றால், அதன் மூலமாகப் பொதுமக்களுக்கான நிரந்தரச் சொத்துக்களைக் கட்டி எழுப்ப வேண்டும். உதாரணமாக, அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது பெரிய அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்க வேண்டும். இவை அடுத்த 50 முதல் 60 ஆண்டுகளுக்கு, அதாவது தலைமுறை கடந்து நிலைத்து நிற்கக் கூடியவை ஆகும்.

பொருளாதார வளர்ச்சி:

இத்தகைய கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதுமட்டுமன்றி, அந்த நிறுவனங்களைச் சுற்றித் தொழில்கள் வளரும்; மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் உருவாகும்; போக்குவரத்து வசதிகள் பெருகும். இவ்வாறு கடன் வாங்கிச் சொத்துக்களை உருவாக்கும் போது, அது ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் பலதரப்பட்ட நல்ல தாக்கங்களை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை வேகமாக வளர்க்கும்.

மத்திய அரசின் கட்டமைப்புப் பணிகள்:

இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருவதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார். “சாலைகளைக் கட்டுங்கள், துறைமுகங்களை அதிகரியுங்கள், விமான நிலையங்களை அமையுங்கள் மற்றும் பெரிய பெரிய மருத்துவமனைகளை உருவாக்குங்கள்; அப்போதுதான் மக்கள் வருவார்கள், பொருளாதாரச் சொத்துக்கள் பெருகும்” என்ற நோக்கில் மத்திய அரசு மூலதனச் செலவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வருவாய்ச் செலவினங்கள் குறித்த எச்சரிக்கை:

அரசாங்கங்கள் வாங்கும் கடன் பணத்தை வெறும் வருவாய்ச் செலவினங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவது ஆபத்தானது என்றும் நிதியமைச்சர் எச்சரித்தார். கடன் வாங்கும் பணத்தை வைத்துக்கொண்டு, சொத்துக்களை உருவாக்காமல், வெறும் மக்கள் கையில் பணத்தைக் கொடுப்பது, சம்பள உயர்வுகளை அறிவிப்பது, நிதியுதவிகளை வழங்குவது போன்ற தற்காலிகச் செயல்பாடுகளை மட்டுமே முதன்மையாகச் செய்யக்கூடாது.

மேலும் படிக்க: வகுப்பறையில் அரங்கேறிய அநாகரிகம்.. மாணவர்களுக்கு ஓரின சேர்க்கை தொல்லை.. கீழ்தரமான ஆசிரியர் சிறையிலடைப்பு!

அரசுக்குத் தாராளமாக நிதி வசதி இருக்கும் போது இத்தகைய நலத்திட்டங்களை தாராளமாகச் செய்யலாம்; ஆனால், நிதி வசதி குறைவாக இருக்கும் சூழலில், வாங்கும் கடனை எதிர்காலச் சொத்துக்களை உருவாக்குவதற்காக மட்டுமே செலவழிக்க வேண்டும் என்பதே முறையான நிதி மேலாண்மை தத்துவமாகும் என்று நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார்.

Follow Us