AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘Start Run, Stop Drugs’ ஓட்டம்.. மக்களுடன் இணைந்து மாரத்தானில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்..

சென்னையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து, மக்களுடன் இணைந்து ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். "உயர்ந்த நோக்கத்திற்காக ஓடுவோம்... போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த ஓட்டம், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் இருந்து தொடங்கி 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.

‘Start Run, Stop Drugs’ ஓட்டம்.. மக்களுடன் இணைந்து மாரத்தானில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்..
மாரத்தானில் கலந்துக்கொண்ட முதல்வர் விஜய்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Jun 2026 07:09 AM IST

ஜூன் 26, 2026: சென்னை காமராஜர் சாலையில், பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகே நடைபெற்ற ‘Start Run, Stop Drugs’ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026-ஐ முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் இணைந்து ஓட்டத்தில் பங்கேற்றார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ‘Start Run, Stop Drugs’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்:

சென்னையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து, மக்களுடன் இணைந்து ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். “உயர்ந்த நோக்கத்திற்காக ஓடுவோம்… போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த ஓட்டம், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் இருந்து தொடங்கி 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.

போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு “உன் தலை நிமிர… உன் நிலை உயர… Say No to Drugs” என்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பாடலை முதலமைச்சர் விஜய் நேற்று வெளியிட்டிருந்தார்.

விழிப்புணர்வு பலகையில் கையெழுத்து:

இன்று நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். “Start Run, Stop Drugs” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து அவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

மேலும், “Start Run, Stop Drugs… Sports-ஆ எடு, Drugs-ஆ விடு… பிரியமுடன், விஜய்” என்ற வாசகத்துடன் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகையில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.

போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி:

அதைத் தொடர்ந்து, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய், பொதுமக்கள் முன்னிலையில் உறுதிமொழியை வாசிக்க, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அதனைத் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழியில், “போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் போதைப்பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்.

போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த என்னால் இயன்ற பங்களிப்பை முழுமையாக வழங்குவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, கடத்தல் மற்றும் பயன்பாட்டைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். போதைப் பழக்கமற்ற தமிழ்நாட்டை உருவாக்க அரசுக்கு உறுதுணையாக இருப்பேன்” என உறுதியேற்றுக்கொண்டனர்.

மக்களோடு மாரத்தானில் பங்கேற்ற முதல்வர் விஜய்:

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ரமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்து, மக்களுடன் மக்களாக இணைந்து 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற ஓட்டத்தில் பங்கேற்று, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்மாதிரியாக செயல்பட்டார்.

Follow Us