சிறுவன் கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன்மூர்த்தி.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
Poovai Jagan Moorthy Case : சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் இவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தை பூவை ஜெகன் மூர்த்தி நாடி உள்ளார்.

சென்னை, ஜூன் 28 : திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தல் வழக்கில் (Minor Abduction Case) புரட்சி பாரம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி (Poovai Jagan Moorthy) முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் இவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தை பூவை ஜெகன் மூர்த்தி நாடி உள்ளார். முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுடி செய்யப்பட்டதால், அவர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இதனை அடுத்து, பூஜை ஜெகன்மூர்த்தி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதன் மூலம், அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். இதனால், அவர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
சிறுவன் கடத்தல் வழக்கு
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனுஷ். அவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ண காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்த்து தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தனுஷின் தாய் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், புரட்சி பாரம் கட்சி தலைவரும், கேவிகுப்பம் எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர்.
தன்னை காவல்துறையினர் கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கோரி, ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கிடையில், இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து, ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, தாக்குதல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் எனவும் சஸ்பெண்ட் உத்தரவையும் ரத்து செய்தது. வழக்கின் விசாரணையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, இந்த வழக்கில் மூளையாக ஜெகன் மூர்த்தி செயல்பட்டுள்ளார். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, அவரின் பதில் தெளிவாக இல்லை, முன்ஜாமீன் கொடுத்தால் அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி முன்ஜாமீன் முனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.