Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கைதாகிறாரா பூவை ஜெகன் மூர்த்தி? முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்!

Minor Abduction Case : சிறுவன் கடத்தல் வழக்கில் பூஜை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பூவை ஜெகன்மூர்த்தி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். இதன் மூலம், பூவை ஜெகன் மூர்த்தி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கைதாகிறாரா பூவை ஜெகன் மூர்த்தி? முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்!
பூவை ஜெகன்மூர்த்தி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Jun 2025 18:26 PM

சென்னை, ஜூன் 27 : திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் (Minor Abduction Case) சிக்கிய புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியின் (Poovai Jagan Moorthy) முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் (Madras High Court) தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் புரட்சி பாரதம் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூவை ஜெகன் மூர்த்தி தற்போது கே.வி.குப்பம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஏற்கனவே இந்த வழக்கு நீதிபதி வேல்முருகனிடம் இருந்து, நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வுக்கு மாற்றப்பட்டு இன்று (2025, ஜூன் 27) விசாரணைக்கு வந்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் பதிவு திருமணம் செய்த நிலையில் இந்த திருமணத்திற்கு சாதிய பாகுபாட்டை காரணம் காட்டி விஜயஸ்ரீயின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தனுஷ் வீட்டில் இருந்த விஜய் ஸ்ரீயை தேடி அவரது பெற்றோர் உள்ளிட்ட சிலர் சென்றுள்ளனர். அங்கு இருவரும் இல்லாத நிலையில் தனுஷின் சகோதரரை கடத்தி சென்றனர். இதனைத் தொடர்ந்து அவரது தாயார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த நிலையில் அந்த கும்பல் சிறிது தூரத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் சிறுவனை இறக்கி விட்டு சென்று விட்டது. இந்த நிலையில் இந்த கடத்தலுக்கு ஏடிஜிபி ஒருவரின் கார் பயன்படுத்தப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. போலீஸ் வாகனத்தில் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் காட்டுத் தீயப் போல் பரவியதால் அந்த கும்பல் திருவனை இறக்கிவிட்டு தப்பி ஓடியது.

இந்த சம்பவம் தொடர்பாக வெல்லவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் காவல்துறை வாகனம் சம்பந்தப்பட்டிருப்பதால் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வழக்கு மண்டல ஐஜியான அஸ்ரா கார்க் உத்தரவிட்டிருந்தார்.

கைதாகிறாரா பூவை ஜெகன் மூர்த்தி?

இதன் அடிப்படையில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பெயரில் ஏடிஜிபி பதவியில் இருக்கும் ஜெயராமை  போலீசார் கைது செய்தனர். மேலும், தமிழக அரசு ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கை எடுத்து ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை அடுத்து, ஏடிஜிபி ஜெயராமின் கைது உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில்,  சிறுவன் கடத்தல் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில்  பூவை ஜெகன்மூர்த்தி கைது செய்யப்படலாம் என்பதால்,  அவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் பூவை ஜெகன்மூர்த்தி கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி மூளையாக செயல்பட்டதாக காவல்துறை நீதிமன்றத்தி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.