சென்னையில் பயங்கரம்.. பெட்ரோல் பங்க் அதிபர் வெட்டிக் கொலை.. நடந்து என்ன?
Chennai Murder : சென்னையில் கூவத்தூரில் பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையால் நடந்ததா? நிலத்தகறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, ஜூன் 30 : சென்னையில் பெட்ரோல் பங்க அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் (Chennai Murder) அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கூவத்தூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தை கண்டித்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (50). இவர் கல்பாக்கத்தில் பெட்ரேல் பங்க் நடத்தி வருகிறார். வழக்கமாக இவர் பெட்ரோல் பங்கை மூடிவிட்டு, வீட்டுக்கு காரில் செல்வது வழக்கம். ஆனால், அவர் 2025 ஜூன் 29ஆம் தேதி அவர் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த மோகன் ராஜை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளனர். இதனை அடுத்து, அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளாலை எடுத்து, சரிமாரியாக வெட்டியுள்ளனர்.
பெட்ரோல் பங்க் அதிபர் வெட்டிக் கொலை
பின்னர், அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இதனை அடுத்து, அங்கு மோகன் ராஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை அடுத்து, இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே ஆன்புலன்ஸுக்கு அழைத்தனர். இதனை அடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த மோகன் ராஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடி வருகின்றனர். மேலும், எந்த காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.




பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையால் நடந்ததா? நிலத்தகறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்க் அதிபர் மோகன்ராஜ் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஈசிஆர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மற்றொரு சம்பவம்
தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. அண்மையில் கூட, சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்த செல்லப்பட்ட இளைஞர் மர்ம முறையில் இறந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவரது மரணம் குறித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் மரணத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.