AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நேபாள நாட்டில் கடும் வெள்ளப் பெருக்கு… 49 தமிழர்களின் நிலை என்ன!

Nepal Floods : நேபாள நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் அந்த நாட்டுக்கு கைலாஷ் யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதில், 22 பேர் மீட்கப்பட்ட நிலையில், 49 பேரின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது.

நேபாள நாட்டில் கடும் வெள்ளப் பெருக்கு… 49 தமிழர்களின் நிலை என்ன!
வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 26 Aug 2026 15:55 PM IST

நேபாள நாட்டில் இன்று திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், அந்த நாட்டுக்கு சென்னையை சேர்ந்த 49 பேர் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 57 பேர் என இந்தியாவை சேர்ந்த சுமார் 400 பேர் கைலாஷ் யாத்திரைக்கு சுற்றுலா சென்று இருந்தனர். இவர்கள் கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்க முயற்சியில் நேபாள நாட்டு ராணுவம் உள்ளிட்ட படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில், தமிழகத்தை சேர்ந்த 49 பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. நேபாள ராணுவம் சுமார் 7 ஹெலிகாப்டர்களில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில், தமிழகத்தை சேர்ந்த சுமார் 30- க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் நேபாள ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், கும்பகோணத்தை சேர்ந்த சுமார் 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் முயற்சியில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த 8 பேர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

 

( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)

Follow Us