இனி நல்லது நடக்கும்.. அன்புமணியை ஆரத்தழுவி கண்ணீர் விட்ட பாமக நிறுவனர் ராமதாஸ்..
Anbumani Meets Ramadoss: தந்தையின் திருமண நாளை ஒட்டி, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்த அன்புமணி ராமதாஸ், அவரிடம் வாழ்த்து பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "இனி நல்லது நடக்கும்" எனத் தெரிவித்தார்.
ராமதாஸை சந்தித்த அன்புமணி
ஜூன் 24, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை – மகன் இடையே நீடித்து வந்த மோதல் போக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு தற்போது சுமுகமான முடிவை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. தந்தையின் திருமண நாளை ஒட்டி, தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்த அன்புமணி ராமதாஸ், அவரிடம் வாழ்த்து பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “இனி நல்லது நடக்கும்” எனத் தெரிவித்தார்.
Follow Us