AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவையில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பிய வடமாநிலப் பெண்.. பீதியில் பொதுமக்கள்.. கைதான கும்பலின் வேலையா?

Coimbatore Sulur North Indian Woman: கோவை சூலூரில் வடமாநிலப் பெண் ஒருவர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறிக் குதித்துத் தப்பிச் செல்லும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. சிங்காநல்லூர் போலீஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட 5 வடமாநிலப் பெண்கள் கொண்ட அதே கும்பலா அல்லது வேறு புதிய கும்பலா என்ற கோணத்தில் பொதுமக்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பிய வடமாநிலப் பெண்.. பீதியில் பொதுமக்கள்.. கைதான கும்பலின் வேலையா?
சுவர் ஏறி குதிக்கும் வடமாநிலப் பெண்
Sekaran S
Sekaran S | Updated On: 16 Aug 2026 12:38 PM IST

கோவை, ஆகஸ்ட் 16: கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் யாசகம் கேட்பது போலவும், ஆதரவற்றவர்கள் போலவும் நடித்து வீடுகளை நோட்டமிட்டுத் திருட்டில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் சிங்காநல்லூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 5 வடமாநிலப் பெண்களைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில், தற்போது சூலூர் பகுதியில் பெண் ஒருவர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மின்னல் வேகத்தில் ஏறி குதித்துத் தப்பும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!

சிங்காநல்லூர் சம்பவம் மற்றும் சிறையிலடைப்பு:

கோவை, சிங்காநல்லூர் ஜி.வி. ரெசிடென்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் பகல் நேரங்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 5 வடமாநிலப் பெண்களை அண்மையில் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். இவர்கள் யாசகம் கேட்பது போல வீடுகளை நோட்டமிட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செப்புக் கம்பிகள், ஏசி சாதனங்கள் மற்றும் வீட்டின் வெளிப்புறப் பொருட்களைத் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த 5 பெண்களையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

சூலூரில் வைரலாகும் அதிர்ச்சி செல்போன் வீடியோ:

சிங்காநல்லூர் கைதைத் தொடர்ந்து பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்த நிலையில், தற்போது சூலூர் பகுதியில் பதிவான செல்போன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வடமாநிலப் பெண் ஒருவர் ஒரு வீட்டின் உயரமான காம்பவுண்ட் சுவரில் சுலபமாக ஏறி, சுவருக்கு வெளிப்புறமாக நிலத்தில் குதித்துத் தப்பி ஓடுகிறார். அதே நேரத்தில், அவரது கூட்டாளிகளான மேலும் சிலர் தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் காட்சிகளும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. பட்டப்பகலில் நடந்த இந்த சாகசத் திருட்டு முயற்சி அப்பகுதி குடியிருப்பு வாசிகளை உரைய வைத்துள்ளது.

காவல்துறையின் தீவிர விசாரணை:

இந்த வீடியோ பரவத் தொடங்கியதை அடுத்து, “சிங்காநல்லூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட அதே 5 பெண்கள் கொண்ட கும்பல் தானா இது? அல்லது அவர்கள் கைதாவதற்கு முன்பாகச் சூலூர் பகுதியில் கைவரிசை காட்டியபோது பதிவான பழைய காட்சியா?” என்ற கேள்வியும் சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது கைதான கும்பலின் பழைய வீடியோவா அல்லது கோவை நகருக்குள் அதே பாணியில் உலாவரும் புதிய திருட்டுக் கும்பலின் வேலையா என்பது குறித்துச் சூலூர் மற்றும் சிங்காநல்லூர் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : “லஞ்சமும் ஊழலுமற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதும் விடுதலைக்குச் சமமே!”.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு!

ரோந்துப் பணியை அதிகரிக்க கோரிக்கை:

மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய சம்பவங்களைக் கட்டுப்படுத்தக் காவல் துறை உடனடியாகக் களமிறங்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றும் அடையாளம் தெரியாத வடமாநில நபர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், பகல் மற்றும் இரவு நேரப் போலீஸ் ரோந்துப் பணியை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்றும் கோவை குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us