நாமக்கலில் மூதாட்டி கொடூரக்கொலை: நடந்தது என்ன? போலீசார் விளக்கம்

Namakkal Murder Mystery: நாமக்கல் மாவட்டம் குளத்துப்பாளையத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட மூதாட்டி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நிகழ்வுகள் இல்லாதது விசாரணையில் தெரியவந்துள்ளது. சில ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவியதாக போலீசார் தெரிவித்து, புலனாய்வுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

நாமக்கலில் மூதாட்டி கொடூரக்கொலை: நடந்தது என்ன? போலீசார் விளக்கம்

நாமக்கலில் மூதாட்டி கொடூரக்கொலை

Published: 

09 Jun 2025 07:07 AM

நாமக்கல் ஜூன் 09: நாமக்கல் மாவட்டம் (Namakkal) குளத்துப்பாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டி சாமியாத்தால் அடையாளம் தெரியாத இருவர் கத்தியால் குத்தி கொலை (Elderly Woman Murder) செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மூதாட்டி, தாக்கப்பட்டதும் உறவினருக்கு அழைத்து தகவல் தெரிவித்தார். ஆனால் நகை, பணம் கொள்ளை செல்லாமல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. சில செய்தி ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது புலனாய்வை பாதிக்கக்கூடியது எனவும், தவறான தகவல் வெளியிடுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது நான்கு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மூதாட்டி கொலை வழக்கு : நாமக்கல் போலீசார் விளக்கம்

பரமத்திவேலூர் அருகே உள்ள சித்தம்பூண்டி கிராமத்தில் உள்ள குளத்துப்பாளையம் தோட்ட வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த மூதாட்டி சாமியாத்தால் (வயது 70 மேல்) கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் (08.06.2025) அதிகாலை நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. மூதாட்டியின் வாய் மற்றும் கழுத்துப் பகுதியில் ஆபத்தான வகையில் வெட்டப்பட்டிருந்ததாகவும், அந்தத் தாக்குதலை அடையாளம் தெரியாத இருவர் மேற்கொண்டதாகவும் தெரிகிறது.

நாமக்கல் போலீசார் விளக்கம்

மகனுக்கு தகவல் அளித்த மூதாட்டி

தகவல் அறிந்ததும் நல்லூர் காவல் நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேலகவுண்டம்பட்டி காவல் ஆய்வாளர் தலைமையில் புலனாய்வு துவங்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி தாக்குதல் நடந்ததும் தனது மகனுக்கும் உறவினருக்கும் அழைத்து தகவல் தெரிவித்துள்ளதாகவும், தன்னை வெட்டியது யாரோ இருவர் எனவும் கூறியுள்ளார். ஆனால் நகை, பணம் ஆகியவை கொள்ளை செல்லவில்லை என்பது முக்கிய அம்சமாகக் குறிப்பிடப்படுகிறது.

தவறான தகவல் பரவியதாக போலீசார் விளக்கம்

இதையடுத்து சில மீடியாக்களில் இந்த சம்பவம் ஆதாய நோக்கில் நடந்ததாக தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பொதுமக்களில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, புலனாய்வையும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக நாமக்கல் காவல்துறை விளக்கமளித்துள்ளது. தற்போது மூதாட்டி சிகிச்சையில் பலனின்றி உயிரிழந்த நிலையில், பரமத்தி வேலூர் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நான்கு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

நான்கு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை

இவ்வழக்கில் விசாரணை முடியும் முன்பே தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி சேனல்களில் வெளியிடக் கூடாது என்றும், அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பரமத்தி வேலூர் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நான்கு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.