AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக கூட்டணியில் தொடருமா மதிமுக? துரதிஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்.. துரை வைகோ சொன்ன டிவிஸ்ட்..

மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “புதிய அரசுக்கு நிச்சயமாக கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ மாற்றங்களை நம்மால் உருவாக்க முடியாது. குறைந்தபட்சம் 6 மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை கால அவகாசம் கொடுத்தால்தான் புதிய அரசாங்கத்தால் மாற்றங்களை உருவாக்க முடியும் என பேசியுள்ளார்.

திமுக கூட்டணியில் தொடருமா மதிமுக? துரதிஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்.. துரை வைகோ சொன்ன டிவிஸ்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Jun 2026 18:45 PM IST

ஜூன் 1, 2026: திமுக கூட்டணியில் தொடர்வது தொடர்பாக ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதிக்கான தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக, பிற்பகல் 2.30 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றடைந்தார். அங்கு காவல்துறையினர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதிய அரசுக்கு ஒரு வருடம் வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும்:

அந்த சூழலில், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “புதிய அரசுக்கு நிச்சயமாக கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ மாற்றங்களை நம்மால் உருவாக்க முடியாது. குறைந்தபட்சம் 6 மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை கால அவகாசம் கொடுத்தால்தான் புதிய அரசாங்கத்தால் மாற்றங்களை உருவாக்க முடியும் என்பது எனது கருத்து.

துரதிஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டோம்:

எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் துரதிஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டார்கள். எனவே, தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு கொடுக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு கிடைக்கவில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இயக்கங்கள் ஆதரவு கொடுத்திருந்தார்கள்.

மேலும் படிக்க: திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்.. சால்வை அணிவித்து வரவேற்ற எம்.பி துரை வைகோ..

வரக்கூடிய ஜூன் 27ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்குழுவில் திமுக கூட்டணியில் தொடர வேண்டுமா என்பது குறித்து கேட்கப்படும். நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மனநிலைப்படி முடிவு எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கட்சி தாவல் தடைச் சட்டம் பாயுமா?” என்ற கேள்விக்கு, “பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டால் கட்சி தாவல் தடைச் சட்டம் எப்படி பாயும்? மதிமுக என்பது ஒரு தனிப் பெரும் இயக்கம்” என விளக்கம் அளித்துள்ளார்.

Follow Us