AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமைச்சரவையில் அதிமுக.. எங்கள் முடிவை நாங்கள் மறுபரிசீலனை செய்ய நேரிடும் – பெ. சண்முகம்..

சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளித்திருந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. தொடர்ந்து அதிமுக இரண்டு பிரிவுகளாகவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த தகவல் உண்மையானால் தமிழக வெற்றிக்கழகத்திற்கு வழங்கிய ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் அதிமுக.. எங்கள் முடிவை நாங்கள் மறுபரிசீலனை செய்ய நேரிடும் – பெ. சண்முகம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 May 2026 21:30 PM IST

மே 19, 2026: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும், அரசியல் பரபரப்பு என்பது சற்றும் குறையாமல் தினந்தோறும் புதுப்புது நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஒரு பக்கம் தமிழக வெற்றிக்கழக அரசு, மற்றொரு பக்கம் அதிமுக, இன்னொரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என அரசியல் சலசலப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில், கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அமைச்சரவையில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

அதிமுக உட்கட்சி விவகாரம்:

சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளித்திருந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. தொடர்ந்து அதிமுக இரண்டு பிரிவுகளாகவே செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த தகவல் உண்மையானால் தமிழக வெற்றிக்கழகத்திற்கு வழங்கிய ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

திராவிட கட்சிகளுக்கு எதிராக வாக்களித்த மக்கள்:

இது தொடர்பாக பேசிய அவர், “தமிழக வெற்றிக்கழகத்திற்கு நாங்கள் ஆதரவளித்திருப்பது மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கக் கூடாது என்பதற்காகவும், கொள்ளைப்புறம் வழியாக பாஜக ஆளுநர் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். மக்களின் தீர்ப்பு என்பது திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எதிராகத்தான் இருந்தது. அதே சமயம், அறுதிப் பெரும்பான்மையை யாரும் பெறவில்லை. இதில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்ததன் காரணமாகத்தான் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளித்துள்ளோம்.

மேலும் படிக்க: முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஷாக்.. அரசு அதிகாரியின் செயலா?

முடிவை மீண்டும் பரிசீலனை செய்ய நேரிடும்:

அதிமுகவை அவர்கள் ஆட்சியில் சேர்த்துக் கொள்வதோ, அமைச்சரவையில் இடம் வழங்குவதோ மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. அது ஒரு நல்லாட்சிக்கு விரோதமானதாக அமையும். ஏற்கனவே இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அத்தகைய கட்சியின் ஆதரவை பெற்று தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை தொடர்வது என்பது மக்கள் தீர்ப்புக்கு எதிராக அமையும்.

அத்தகைய நிலைக்கு அவர்கள் செல்ல மாட்டார்கள் என நான் நம்புகிறேன். இவற்றை மீறி அதிமுகவின் ஆதரவை தமிழக வெற்றிக்கழகம் பெறும் சூழல் ஏற்பட்டால், நிச்சயமாக எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us