AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“கல்லணை இன்றும் நிற்கிறது, நாம் கட்டும் பாலம் ஏன் உடைகிறது?” பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் – எ.வ.வேலு இடையே அனல்பறந்த விவாதம்!!

Maria Wilson vs EV Velu Heated Debate: தென்பெண்ணை ஆற்றுப் பாலம் உடைந்த விவகாரம் குறித்துப் பேரவையில் அமைச்சர் மேரி வில்சன் மற்றும் எ.வ. வேலு இடையே அனல்பறக்கும் விவாதம் நடைபெற்றது. வெள்ளத்தால் பாலம் உடைந்ததாக எ.வ. வேலு விளக்கமளித்த நிலையில், முந்தைய ஆட்சியின் கட்டுமானப் பணிகள் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

“கல்லணை இன்றும் நிற்கிறது, நாம் கட்டும் பாலம் ஏன் உடைகிறது?” பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் – எ.வ.வேலு இடையே அனல்பறந்த விவாதம்!!
அமைச்சர் மரிய வில்சன், எ.வ.வேலு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Aug 2026 14:01 PM IST

சென்னை, ஆகஸ்ட் 19: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மானியக் கோரிக்கை விவாதங்களின் போது, ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெறும் விவாதங்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இன்று தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் குறுகிய காலத்திலேயே உடைந்த விவகாரம் குறித்து அமைச்சர் மரிய வில்சன் மற்றும் மூத்த உறுப்பினர் எ.வ. வேலு ஆகியோரிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது குறுக்கிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சோழர்கள் கட்டிய கல்லணை இன்றும் நிலைத்து நிற்கும் நிலையில் தற்காலப் பாலங்கள் ஏன் உடைகின்றன என்பது குறித்து விரைவில் விரிவான ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் என அறிவித்தது பேரவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த முழு விவாதத்தின் போதும் முதலமைச்சர் விஜய் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்.

இதையும் படிக்க: “ஆட்டோவில் வருவதால் ID கார்டை காட்டினால் கூட MLA என நம்ப மாட்டார்கள்”.. அனுபவத்தை பகிர்ந்த தவெக MLA.. திரும்பி பார்த்த முதல்வர் விஜய்!!

மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்த பாலம்:

பேரவையில் கட்டுமானங்களின் தரம் குறித்துப் பேசிக் கொண்டிருந்த அமைச்சர் மரிய வில்சன், எதிர்க்கட்சிகளை நோக்கிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, மூத்த உறுப்பினர் எ.வ. வேலுவிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பிய அவர், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சுமார் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்ட மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்தது குறித்து உலகமே பேசியதைச் சுட்டிக்காட்டினார். மேலும், அந்தப் பாலம் உடைந்ததற்குத் தரமற்ற கட்டுமானமே காரணமா அல்லது நீங்கள் கூறுவது போல் நீர்வரத்து அதிகரித்ததா என்பது குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் திட்டவட்டமாகக் கோரினார்.

அதிகமான கனமழை பெய்ததால் பாலம் இடிந்தது:

இதற்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருந்தபோதே விரிவாக விளக்கமளிக்கப்பட்டு அவைக்குறிப்பிலும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார். அந்தப் பாலம் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 54,600 கன அடி நீரைத் தாங்கும் வகையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ஆனால், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ததால், சாத்தனூர் அணையிலிருந்து 2.25 லட்சம் கன அடி நீரும், அதோடு பாம்பாற்றில் இருந்து வந்த நீரும் சேர்ந்து சுமார் 3 லட்சம் கன அடி தண்ணீர் பாலத்தைத் தாக்கியது என்றார். எனவே, பாலத்தின் தாங்கும் திறனை விட பல மடங்கு வெள்ளம் வந்ததால்தான் அது அடித்துச் செல்லப்பட்டதே தவிர, இதில் எந்தவிதமான வடிவமைப்புப் பிழையோ அல்லது தரக்குறைபாடோ இல்லை என நிபுணர் குழுவும் அறிக்கை அளித்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

இதையும் படிக்க: வேகமாகக் குறையும் பிறப்பு விகிதம்..! ‘முதியோர் மாநிலமாக’ மாறும் தமிழ்நாடு.. அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்!!

பெருமழை வந்தாலும் கம்பீரமாக நிற்கும் கல்லணை:

இந்த காரசாரமான விவாதத்திற்குப் பிறகு குறுக்கிட்டுப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர், துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதங்களை மட்டுமே பேசுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், எ.வ. வேலுவின் விளக்கத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், “சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கல்லணை எத்தனை பெருமழை வந்தாலும் இன்றும் கம்பீரமாக நிற்கிறது; ஆனால், நமது காலத்தில் கட்டப்படும் பாலங்கள் குறுகிய காலத்திலேயே அழிந்து போகின்றன” என்று விமர்சித்தார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சார்பாகச் செலவிடப்பட்ட சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை தயாராகி வருவதாகவும், அது முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். அந்த வெள்ளை அறிக்கை வரும்போது, பாலங்கள் உடைந்ததற்கான உண்மையான காரணங்கள் மற்றும் அதில் உள்ள கட்டுமான சிக்கல்கள் முழுமையாக அம்பலமாகும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Follow Us