AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு.. முதல்வர் விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

திமுகவின் முக்கியப் புள்ளியான திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏ ஏ.வா.வேலுவின் வெற்றியை எதிர்த்து, தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தேர்தல் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதேபோல், பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள எஸ். ஜெயகுமாரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலமும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு.. முதல்வர் விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 08 Jul 2026 08:39 AM IST

சென்னை, ஜூலை 08: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் தற்போதும் பரபரப்பாகவே நீடித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக, பல்வேறு முக்கியத் தலைவர்களின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் மாறியுள்ளன. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரதிநிதிகளின் வெற்றியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அவர்கள் பதிலளிக்க அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க : போக்குவரத்துத்துறையில் திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து – பரபரப்பு தகவல்

முதலமைச்சர் விஜயின் வெற்றிக்கு சவால்:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றிருந்தார். இவரது இந்த வெற்றியை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜயின் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகரும், திருச்சி கிழக்கு தொகுதியில் அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த இரு மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் இந்தத் தேர்தல் வழக்கிற்கு மூன்று வாரங்களுக்குள் உரியப் பதிலளிக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்து உத்தரவிட்டனர்.

அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கும் வந்த நெருக்கடி:

வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போதைய புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனாவின் வெற்றியை எதிர்த்தும் திமுக தரப்பிலிருந்து வழக்கு பாய்ந்துள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் 3 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதிமுக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களும் சிக்கினர்:

திமுகவின் முக்கியப் புள்ளியான திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏ ஏ.வா.வேலுவின் வெற்றியை எதிர்த்து, தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தேர்தல் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதேபோல், பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள எஸ். ஜெயகுமாரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலமும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இது தவிர, பல்வேறு கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களின் வெற்றியை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணைக்கு வந்துள்ளன. அதன்படி, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா, சேலம் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ சிவகுமார், சீர்காழி தொகுதி மதிமுக எம்.எல்.ஏ கே. சிவகுமார் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை கோரிய வழக்கு.. கொந்தளித்த உச்சநீதிமன்றம்.. நடந்தது என்ன?

ஜூலை 21-க்குள் இறுதிப் பதில் அளிக்க நீதிமன்றம் கெடு:

இந்தத் தேர்தல் மனுக்கள் அனைத்தையும் விரிவாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்குகளை எதிர்கொண்டுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களும் வரும் ஜூலை 21-ஆம் தேதிக்குள் தங்களது இறுதி விளக்கங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று இறுதி காலக்கெடு விதித்துத் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள இந்தச் சூழ்நிலையில், அவருக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எதிராகத் திமுக மற்றும் பிற கட்சிகள் தொடுத்துள்ள இந்தத் தேர்தல் வழக்குகள், அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் ஜூலை 21-க்குப் பிறகு மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us