AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவமனை வெளியிட்ட தகவல்!!

Kolathur TVK MLA VS Babu Health Update: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்துச் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 11 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும், சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவமனை வெளியிட்ட தகவல்!!
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Sep 2026 13:36 PM IST

சென்னை, செப்.19: சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான வி.எஸ். பாபு, திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று மக்கள் மத்தியில் தீவிரமாக இயங்கி வந்த இவர், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், சமூக வலைதளங்களில் இவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்களும் வதந்திகளும் பரவி வந்தன. இந்நிலையில்தான், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அவரது தற்போதைய ஆரோக்கிய நிலை குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலும், அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு தொடரும்? வானிலை ரிப்போர்ட்

மருத்துவமனை அறிக்கையின் முக்கிய விவரங்கள்:

கடந்த 9-ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாகச் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வி.எஸ். பாபு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்குப் பல்துறை சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய தீவிர மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அவரது உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் சீராகவும் திருப்திகரமாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அளித்து வரும் தீவிர சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நல்ல முறையில் ஒத்துழைத்து வருவதாகவும், உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

11 நாட்களாக ஐ.சி.யு-வில் தீவிர சிகிச்சை:

75 வயதான கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ். பாபு, மூச்சுத் திணறல் மட்டுமன்றி நுரையீரல் தொற்று காரணமாகவும் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் (MGM) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உடலுறுப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பல்துறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு, கடந்த 11 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்து அவருக்குத் தொடர் சிகிச்சை அளித்து வருகிறது. நேற்று இரவு அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகக் பரவிய தகவல்களுக்கு இடையே, இரத்த அழுத்தம் மற்றும் பிற உடலியல் அளவீடுகள் அனைத்தும் சீராக இருப்பதாகவும், அளிக்கப்பட்டு வரும் சிறப்பு மருத்துவப் பராமரிப்புக்கு அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றத்தைக் காட்டி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிக்க: சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்க 4 கடற்கரைகளுக்கு அனுமதி.. காவல்துறை பிறப்பித்த முக்கியக் கட்டுப்பாடுகள்!

தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நிம்மதி:

சமூக வலைதளங்களில் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்துப் பரவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு இடையே, மருத்துவமனை நிர்வாகம் நேரடியாக இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தொடர்ந்து மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் அவர், முழுமையாகக் குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Follow Us