AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வாபஸ்.. எஸ்கார்ட் பாதுகாப்பாக குறைத்து நடவடிக்கை!

Former CM MK Stalin: முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த 'இசட்' (Z) பிரிவு பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாகத் தற்போது ஒரு உதவி ஆய்வாளர் தலைமையிலான 4 காவலர்கள் அடங்கிய எஸ்கார்ட் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த அதிரடி பாதுகாப்பு மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வாபஸ்.. எஸ்கார்ட் பாதுகாப்பாக குறைத்து நடவடிக்கை!
மு.க.ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 30 Aug 2026 08:53 AM IST

சென்னை, ஆகஸ்ட் 30: தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல் அளவுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டப் பாதுகாப்புகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அரசமைப்பு ரீதியான பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் முன்னாள் அரசுப் பொறுப்பில் இருந்தவர்களுக்கும் மத்திய, மாநில உளவுத் துறையின் பரிந்துரைகளின் அடிப்படையில் வழக்கமாகப் பாதுகாப்பு உறை மறுஆய்வு செய்யப்படுவது இயல்பு. அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த உயர்மட்ட ‘இசட்’ (Z) பிரிவு பாதுகாப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டு, அவருக்குப் பதிலாக எளிமையான ‘எஸ்கார்ட்’ பாதுகாப்பு மட்டுமே இனி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “கோயிலுக்கும் திமுகவினருக்கும் என்ன சம்பந்தம்?”.. அறங்காவலர் குழு நியமனம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பளார்!

இசட் பிளஸ் முதல் தற்போதைய எஸ்கார்ட் வரை:

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் அவருக்கு அதிஉயர் ‘இசட் பிளஸ்’ (Z+) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதில் சிறப்புப் படைப் பிரிவினர், மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை, இரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் மாநிலக் காவல் துறையின் உயரதிகாரிகள் என 55-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் குண்டு துளைக்காத சிறப்பு வாகனங்களும் அவரது வாகன அணிவகுப்பிற்கு வழங்கப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு, முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் அவருக்கு ‘இசட்’ (Z) பிரிவு பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது மேலும் குறைக்கப்பட்டு எஸ்கார்ட் பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளது.

புதிய எஸ்கார்ட் பாதுகாப்பின் நடைமுறைகள்:

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறையின்படி, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அவர் பயணம் செய்யும்போது பின்னால் ஒரே ஒரு எஸ்கார்ட் வாகனம் மட்டுமே தொடரும். இதனுடன் வழக்கமாக அவருடன் பயணிக்கும் 3 தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து அவரது பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.

இதையும் படிக்க : “எந்த திட்டமானாலும் விவசாய நிலத்தை எடுத்தாக வேண்டும்”.. அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் சர்ச்சை.. சிபிஎம் சண்முகம் கடும் கண்டனம்!!

முன்னாள் முதல்வர்களுக்கான பாதுகாப்பு நடைமுறை:

ஏற்கனவே முன்னாள் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இதேபோன்று எஸ்கார்ட் அடிப்படையிலான பாதுகாப்பே நடைமுறையில் இருந்து வருகிறது. அதே வழக்கத்தின் அடிப்படையில் தற்போது முன்னாள் முதலமைச்சர் என்ற தகுதியில் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த எஸ்கார்ட் பாதுகாப்பு மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டு, இந்தப் புதிய எஸ்கார்ட் பாதுகாப்பு அமைப்பு உடனடி அமலுக்கு வந்துள்ளது.

Follow Us